tamilni 76 scaled
உலகம்செய்திகள்

இங்கிலாந்தில் பார்வையாளர்கள் முன்னிலையிலேயே குதிரையிலிருந்து தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த 25 வயது ஜாக்கி!

Share

இங்கிலாந்தில் பார்வையாளர்கள் முன்னிலையிலேயே குதிரையிலிருந்து தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த 25 வயது ஜாக்கி!

இங்கிலாந்தில் நடந்த குதிரை ஓட்டப் பந்தயத்தில் ஜாக்கி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கென்ட் நகரின் Charing ரேஸ்கோர்ஸில் இறுதி குதிரை ஓட்டப் பந்தயம் நடந்தது. இதில் கேகன் கிர்க்பி (Keagan Kirkby) எனும் 25 வயது ஜாக்கியும் கலந்துகொண்டார்.

பந்தயம் நடந்துகொண்டிருந்தபோது திடீரென அவர் குதிரையில் இருந்து தூக்கிவீசப்பட்டார். இதனைக் கண்ட பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக மருத்துவக் குழு வந்து கேகனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பால் நிக்கோல்ஸ் குழுவில் கேகன் ஒரு மரியாதைக்குரிய உறுப்பினராக இருந்திருக்கிறார்.

அவர் 2019யில் பந்தயத்தில் இணைந்தார் மற்றும் டிசம்பர் 2021யில் மாதத்திற்கான பணியாளருக்கான விருது பெற்றார்.

கேகனின் பயிற்சியாளர் பால் நிக்கோல்ஸ் தனது இரங்கல் பதிவில், ‘வாழ்க்கை சில நேரங்களில் மிகவும் கடினமானது, இன்று நடந்ததை ஒப்பிடும்போது வெற்றியாளர்கள் முக்கியமற்றவர்கள்’ என தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...