1 4 scaled
உலகம்செய்திகள்

கடவுச்சீட்டு ஏதுமின்றி அமெரிக்காவுக்கு பறந்த பிரித்தானியர்: அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்

Share

கடவுச்சீட்டு ஏதுமின்றி அமெரிக்காவுக்கு பறந்த பிரித்தானியர்: அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து கடவுச்சீட்டு உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இன்றி, பிரித்தானியர் ஒருவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு பயணித்துள்ள சம்பவம் தீவிர விசாரணைக்கு காரணமாகியுள்ளது.

குறித்த விவகாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உள்விவகார செயலாளர் James Cleverly கோரியுள்ளார். அதிர்ச்சியடையவைக்கும் இந்த சம்பவமானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் திகதி நடந்துள்ளது.

46 வயதான Craig Sturt என்ற வேலையற்ற நபர் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து, எந்த வித பாதுகாப்பு மற்றும் ஆவண சோதனை எதையும் முன்னெடுக்காமல் சாமர்த்தியமாக விமான பேருந்தில் ஏறியுள்ளார்.

கிறிஸ்துமஸ் கொண்டாடும் பொருட்டு அமெரிக்காவுக்கு புறப்படும் நூற்றுக்கணக்கன பயணிகளுடன் அவரும் பயணித்துள்ளார். உண்மையில் அந்த விமானமானத்தின் அனைத்து இருக்கைகளும் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும்,

ஆனால் ஹீத்ரோ விமான நிலையத்திற்கான இணைப்பு விமானத்தை தவறவிட்ட பயணிகளால், தொடர்புடைய நியூயார்க் விமானத்தில் சில இருக்கைகள் காலியாக இருந்துள்ளது.

அந்த வாய்ப்பை Craig Sturt பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 9 மணி நேரத்திற்கு பின்னர் விமானம் தரையிறங்கியதும் அமெரிக்க அதிகாரிகளிடம் Craig Sturt சிக்கியுள்ளார்.

அங்கிருந்து அவரை வெளியேற்றிய நிலையில், கிறிஸ்துமஸ் நாளில், இரவு 8 மணிக்கு Craig Sturt லண்டனில் அதிகாரிகளிடம் சிக்கினார். ஆனால் ஜனவரி 22ம் திகதி அவரை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...