1 4 scaled
உலகம்செய்திகள்

கடவுச்சீட்டு ஏதுமின்றி அமெரிக்காவுக்கு பறந்த பிரித்தானியர்: அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்

Share

கடவுச்சீட்டு ஏதுமின்றி அமெரிக்காவுக்கு பறந்த பிரித்தானியர்: அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து கடவுச்சீட்டு உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இன்றி, பிரித்தானியர் ஒருவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு பயணித்துள்ள சம்பவம் தீவிர விசாரணைக்கு காரணமாகியுள்ளது.

குறித்த விவகாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உள்விவகார செயலாளர் James Cleverly கோரியுள்ளார். அதிர்ச்சியடையவைக்கும் இந்த சம்பவமானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் திகதி நடந்துள்ளது.

46 வயதான Craig Sturt என்ற வேலையற்ற நபர் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து, எந்த வித பாதுகாப்பு மற்றும் ஆவண சோதனை எதையும் முன்னெடுக்காமல் சாமர்த்தியமாக விமான பேருந்தில் ஏறியுள்ளார்.

கிறிஸ்துமஸ் கொண்டாடும் பொருட்டு அமெரிக்காவுக்கு புறப்படும் நூற்றுக்கணக்கன பயணிகளுடன் அவரும் பயணித்துள்ளார். உண்மையில் அந்த விமானமானத்தின் அனைத்து இருக்கைகளும் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும்,

ஆனால் ஹீத்ரோ விமான நிலையத்திற்கான இணைப்பு விமானத்தை தவறவிட்ட பயணிகளால், தொடர்புடைய நியூயார்க் விமானத்தில் சில இருக்கைகள் காலியாக இருந்துள்ளது.

அந்த வாய்ப்பை Craig Sturt பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 9 மணி நேரத்திற்கு பின்னர் விமானம் தரையிறங்கியதும் அமெரிக்க அதிகாரிகளிடம் Craig Sturt சிக்கியுள்ளார்.

அங்கிருந்து அவரை வெளியேற்றிய நிலையில், கிறிஸ்துமஸ் நாளில், இரவு 8 மணிக்கு Craig Sturt லண்டனில் அதிகாரிகளிடம் சிக்கினார். ஆனால் ஜனவரி 22ம் திகதி அவரை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...