Japanese woman Chat GPT
உலகம்செய்திகள்

நிச்சயதார்த்தத்தை இரத்து செய்துவிட்டு AI மணமகனைத் திருமணம் செய்த ஜப்பானியப் பெண்!

Share

ஜப்பானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது நிச்சயதார்த்தத்தை முறித்துக்கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் மணமகனைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த யுரினா நோகுச்சி, ‘லூன் கிளாஸ் வெர்டூர்’ (Lune Klaus Verdure) எனப்படும் ChatGPT செயலியால் உருவாக்கப்பட்ட ஓர் உருவக ஆண்.

தனது நிஜக்காலதனுடன் இருந்த உறவுச் சிக்கல்கள் குறித்து ChatGPT-இடம் யுரினா ஆலோசனை பெற்றுள்ளார். அதன் விளைவாக, நிஜக்காதலனைப் பிரிந்துவிட்டு 32 வயதான இந்த AI உருவகத்துடன் காதல் உறவைத் தொடங்கி, தற்போது திருமணமும் செய்துகொண்டுள்ளார்.

மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு மண்டபத்தில் பாரம்பரிய முறைப்படி இந்தத் திருமணம் நடைபெற்றது. ஸ்மார்ட்போன் திரையில் காட்சிப்படுத்தப்பட்ட மணமகனுடன் யுரினா திருமண உறுதிமொழிகளைப் பரிமாறிக் கொண்டார். இந்தத் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாவிட்டாலும், ஒரு முழுமையான திருமணச் சடங்காக இது நடத்தப்பட்டது.

மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான உணர்வு ரீதியான பிணைப்பு அதிகரித்து வருவதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

 

 

Share
தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...