31 1
உலகம்செய்திகள்

ஜப்பானில் துயரம் : வீடுகளில் சடலமாக கிடக்கும் ஆயிரக்கணக்கான முதியவர்கள்

Share

ஜப்பானில் துயரம் : வீடுகளில் சடலமாக கிடக்கும் ஆயிரக்கணக்கான முதியவர்கள்

உலகிலேயே அதிகளவு முதியவர்களை கொண்ட நாடாக விளங்கும் ஜப்பானில்(japan) தனிமையில் வசிக்கும் முதியவர்கள் கவனிக்க எவருமின்றி வீட்டிலேயே உயிரிழந்து கிடப்பதாக துயரமான தகவலொன்று வெளியாகி உள்ளது.

இதன்படி 2024ஆம் ஆண்டில் மட்டும் 40,000 பேர் வீட்டிலேயே இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக அந்த நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில், 4,000 பேர் உயிரிழந்த ஒரு மாதத்துக்கு பிறகும், 130 பேர் உயிரிழந்த ஓராண்டுக்கு பிறகும் சடலமாக வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

ஐ.நா.வின் தரவுகளின்படி, உலகிலேயே மக்கள் தொகையில் அதிகளவில் வயதானவர்களை கொண்ட நாடாக ஜப்பான் உள்ளது. இதன்காரணமாக, கவனிக்க ஆளில்லாமல் தனிமையில் வாழும் முதியவர்கள் வீட்டிலேயே உயிரிழக்கும் நிலை அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், வீட்டில் தனியாக வசித்து வந்த 37,227 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில், 65 வயதுக்கு அதிகமானோர் மட்டும் 70 சதவிகிதம் பேர். 85 வயதுக்கு அதிகமானோர் 7,498 பேர், 75 முதல் 79 வயதுடையவர்கள் 5,920 பேர், 70 முதல் 74 வயதுடையவர்கள் 5,635 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 40 சதவிகிதம் பேரின் சடலங்கள் மட்டுமே அக்கம்பக்கத்தினர் அளிக்கும் தகவலை தொடர்ந்து, ஒரே நாளில் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 3,939 சடலங்கள் ஒரு மாதத்துக்கு பிறகும், 130 சடலங்கள் அழுகிய நிலையில் ஓராண்டுக்கு பிறகும் மீட்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
24 669df6417f6df
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர சுமார்...

images 3 3
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக பெண் சட்டத்தரணி கைது

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு மூளையாகச் செயற்பட்டதாகக் கருதப்படும் இஷாரா...

images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...