11 24
உலகம்செய்திகள்

பணம் கொடுத்து அரிசி வாங்காத ஜப்பானிய அமைச்சர் பதவி விலகினார்

Share

ஜப்பானின் விவசாய அமைச்சர் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஜப்பானில் தற்போது, முக்கிய தானியங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.அத்துடன் விலையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தாம் ஒருபோதும் அரிசியை கொள்வனவு செய்ததில்லை என்ற அவரின் கூற்றே, இந்த பதவி விலகலுக்கு காரணமாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கட்சி கருத்தரங்கில் கருத்து தெரிவித்த டகு எட்டோ, தனது ஆதரவாளர்கள் எப்போதும் தனக்கு அரிசியை பரிசாக வழங்கி வருகின்றனர், எனவே தாம் அரிசியை விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை என்று கூறியிருந்தார்.

அவரது இந்த கருத்து உடனடியாகவே, பொதுமக்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், நுகர்வோர் உயர்ந்து வரும் அரிசி விலையால், சிரமப்படும் நேரத்தில் தாம் பொருத்தமற்ற கருத்து ஒன்றை தெரிவித்தமையை, அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

அத்துடன், பிரதமர் அலுவலகத்தில் தனது பதவி விலகல் கடிதத்தை அவர் இன்று ஒப்படைத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...