images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

Share

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழல் மேலும் அதிகரித்துள்ளது.

ஜப்பானின் ஓகினாவா தீவுகளுக்கு அருகே உள்ள சர்வதேச வான்வெளிப் பகுதியில் இரு வேறு சம்பவங்கள் நடந்துள்ளன.

ஜப்பானின் ‘எஃப்-15’ ரக போர் விமானங்கள் மீது, சீனாவின் லியாவோனிங் (Liaoning) என்ற விமானம் தாங்கிக் போர்க்கப்பலில் இருந்து புறப்பட்ட ‘ஜே-15’ (J-15) ரக போர் விமானங்கள் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை இயக்கியதாக ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது.

FCR என்றால் என்ன? FCR ரேடார் என்பது, ஒரு இலக்கைக் குறிவைத்து ஏவுகணையை ஏவுவதற்குத் தயாராகும் நிலையில் மட்டுமே இலக்கை நோக்கி இயக்கப்படும் ஒரு சாதனம் ஆகும். எனவே, ரேடார் மூலம் இலக்கு வைப்பது, நேரடியான இராணுவ அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.

சீனா, அதன் அருகே உள்ள தைவான் நாட்டைத் தன் சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால், இதற்குத் தைவான் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்தப் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடிக்கும் நிலையில்:

இந்த விவகாரத்தில் தைவானுக்கு ஜப்பான் ஆதரவுக் கரம் நீட்டி உள்ளது. “தைவான் மீது சீனா இராணுவ நடவடிக்கை எடுத்தால், ஜப்பான் பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும்” என அந்நாட்டின் பிரதமர் சனாய் தகைய்ச்சி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்குச் சீனா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இச்சம்பவத்துக்கு ஜப்பான் இராணுவ அமைச்சர் ஷின்ஜிரோ கொய்ஸூமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும், இது தொடர்பாகச் சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...