23 65180ae426d5e
உலகம்செய்திகள்

சிறுபிள்ளைத்தனமாக உள்ளது… கனடாவில் வாழும் இந்தியர்கள் கருத்து

Share

சிறுபிள்ளைத்தனமாக உள்ளது… கனடாவில் வாழும் இந்தியர்கள் கருத்து

கனடா பிரதமரின் குற்றச்சாட்டுகள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளதாக கனடாவில் வாழும் இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எடுத்த நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கனடாவில் வாழும் இந்தியர்கள் கருத்து
கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக ட்ரூடோ குற்றம் சாட்டினாலும், இதுவரை அதற்கான எந்த ஆதாரங்களையும் அவர் இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில், ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளதாக கனடாவில் வாழும் இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். தீவிரப் போக்கு கொண்டவர்கள் வெறும் இரண்டு சதவிகிதத்தினர்தான் கனடாவில் இருக்கிறார்கள். மற்ற சீக்கியர்கள் அப்படிப்பட்டவர்களல்ல என்கிறார் கனடாவில் வாழும் இந்தியரான Amandeep Singh Chabba.

கனேடிய பிரதமர் உறுதியான ஆதாரங்களை அளித்திருக்கவேண்டும். அவருடைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் இந்தியா கனடா உறவுகளில் பிரிவும் பிளவும் ஏற்பட்டுள்ளன என்கிறார் அவர்.

கனடாவில் வாழும் மற்றொரு இந்தியரான Dr Raj Jagpal என்பவர், கனடா அரசு கனடாவில் வாழும் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையில் பிரிவினையை உண்டாக்குகிறது. இது மிகவும் தவறு. ட்ரூடோ ஒன்றில் பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் அல்லது ராஜினாமா செய்யவேண்டும்.தேர்தலில் வாக்குகள் கிடைப்படதற்காக அரசு பிரிவினையை உண்டாக்குகிறது என்கிறார்.

கனடாவில் வாழும் பல சீக்கியர்கள் இதேபோன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...