23 65180ae426d5e
உலகம்செய்திகள்

சிறுபிள்ளைத்தனமாக உள்ளது… கனடாவில் வாழும் இந்தியர்கள் கருத்து

Share

சிறுபிள்ளைத்தனமாக உள்ளது… கனடாவில் வாழும் இந்தியர்கள் கருத்து

கனடா பிரதமரின் குற்றச்சாட்டுகள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளதாக கனடாவில் வாழும் இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எடுத்த நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கனடாவில் வாழும் இந்தியர்கள் கருத்து
கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக ட்ரூடோ குற்றம் சாட்டினாலும், இதுவரை அதற்கான எந்த ஆதாரங்களையும் அவர் இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில், ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளதாக கனடாவில் வாழும் இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். தீவிரப் போக்கு கொண்டவர்கள் வெறும் இரண்டு சதவிகிதத்தினர்தான் கனடாவில் இருக்கிறார்கள். மற்ற சீக்கியர்கள் அப்படிப்பட்டவர்களல்ல என்கிறார் கனடாவில் வாழும் இந்தியரான Amandeep Singh Chabba.

கனேடிய பிரதமர் உறுதியான ஆதாரங்களை அளித்திருக்கவேண்டும். அவருடைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் இந்தியா கனடா உறவுகளில் பிரிவும் பிளவும் ஏற்பட்டுள்ளன என்கிறார் அவர்.

கனடாவில் வாழும் மற்றொரு இந்தியரான Dr Raj Jagpal என்பவர், கனடா அரசு கனடாவில் வாழும் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையில் பிரிவினையை உண்டாக்குகிறது. இது மிகவும் தவறு. ட்ரூடோ ஒன்றில் பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் அல்லது ராஜினாமா செய்யவேண்டும்.தேர்தலில் வாக்குகள் கிடைப்படதற்காக அரசு பிரிவினையை உண்டாக்குகிறது என்கிறார்.

கனடாவில் வாழும் பல சீக்கியர்கள் இதேபோன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...