6 57
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கின் முக்கிய பகுதியில் நிலைகொண்டுள்ள இஸ்ரேல் படைகள்!

Share

சிரியாவின் – ஹெர்மன் மலை உச்சியில், இஸ்ரேலியப் படைகள் காலவரையின்றி தங்கியிருக்கும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தெற்கு சிரியாவில் மூலோபாய நிலத்தைக் இஸ்ரேலியப் படைகள் கைப்பற்றிய நிலையில் தற்போது காட்ஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அங்குள்ள துருப்புக்களைப் பார்வையிட்டமை  தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தமது நாட்டுக்கு விரோதமான படைகளை அங்கு நிலை நிறுத்துவதை தடுக்கவே இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  அவர் விவரித்துள்ளார்.

சிரியா-லெபனான் எல்லைக்கு மேலே உயர்ந்து நிற்கும் பனி மூடிய மலைச் சிகரங்களின் ஒரு பாரிய எல்லைப்பகுதியான ஹெர்மன் மலை, டமஸ்கஸ் கிராமப்புறங்களையும், 1967 மத்திய கிழக்குப் போரில் இஸ்ரேல் சிரியாவிலிருந்து கைப்பற்றிய இஸ்ரேல் ஆக்கிரமித்த கோலன் ஹைட்ஸையும் கண்காணிக்க உதவுகிறது.

இந்நிலையில், சிரியாவிற்குள் ஐ.நா. கண்காணிப்பில் உள்ள இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்தில் தனது துருப்புக்கள் நிலைகளை எடுத்துள்ளதாகவும், சிலர் அதைத் தாண்டிச் சென்றுள்ளதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.

இஸ்ரேலிய எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டவை மற்றும் தற்காலிகமானவை என்று இஸ்ரேலிய அதிகாரிகள் முன்பு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...