tamilni 304 scaled
உலகம்செய்திகள்

காசா மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நோயாளிகள்: ஐ.நா குழு அதிர்ச்சி

Share

காசா மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நோயாளிகள்: ஐ.நா குழு அதிர்ச்சி

காசாவின் அல் ஷிபா மருத்துவமனையில்  32 குழந்தைகள் உள்பட 291 பேர் உயிருக்கு ஆபத்தான முறையில் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தீவிரமடைந்து வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினரின் நிலைகளை கண்டறிந்து இஸ்ரேலிய ராணுவ படை அழித்து வருகிறது.

இதற்கிடையில் காசாவில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலிய ராணுவம் அங்குள்ள அல் ஷிபா மருத்துவமனையை உடனடியாக காலி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

இதனால் அந்த மருத்துவமனையில் இருந்து கிட்டத்தட்ட 2500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காசாவின் அல் ஷிபா மருத்துவமனையை ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான ஐ.நா. குழு, அல் ஷிபா மருத்துவமனையில் 32 குழந்தைகள் உள்பட 291 பேர் உயிருக்கு ஆபத்தான முறையில் தவித்து வருவதாக தெரிவித்துள்ளது.

இதில் பல நோயாளிகள் தீவிரக் காயங்கள், முதுகுத் தண்டுவட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...