உலகம்செய்திகள்

இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து வெடித்த ஏமனின் ஏவுகணை

Share
20 5
Share

ஏமனின் ஹவுதிப்படையினாரால் (Houthi ) ஏவப்பட்ட ஏவுகணை, இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதனால் அப்பகுதியில் புகை சூழ்ந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்ததாக இஸ்ரேலின் தேசிய அவசர சேவையை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினரால், குறித்த ஏவுகணையை தடுப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொண்ட போதும் அவை வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விமான நிலையத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஹவுத்திகள் நடத்தும் நான்காவது ஏவுகணைத் தாக்குதல் இது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
Related Articles
16 4
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸின் (Texas ) எல் பாசோ நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

17 4
இலங்கைசெய்திகள்

யாழில் முதலில் அவருக்கு கால் வைக்க முடியுமா! கடற்றொழில் அமைச்சர் பகிரங்கம்

அநுரவை யாழ்ப்பாணத்தில் கால் வைக்க விடமாட்டோம் எனக் கூறுகின்ற நபர் முதலில் தனக்கு கால் வைக்க...

18 4
உலகம்செய்திகள்

பாப்பரசர் என்று சித்தரிக்கும் AI படத்தால் ட்ரம்ப் மீது கடும் விமர்சனம்

தன்னை பாப்பரசர் என்று சித்தரிக்கும் AI யால் உருவாக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்ததற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

19 4
இலங்கைசெய்திகள்

மின் கட்டணம் அதிகரிக்கிறது! உறுதியாக அறிவித்த ஜனாதிபதி

எதிர்வரும் ஜூலை மாதம் மின்கட்டணம் திருத்தம் செய்யப்படும். குறைந்தபட்ச அளவில் மின்கட்டணம் அதிகரிக்கப்படலாம் என்று ஜனாதிபதி...