உலகம்செய்திகள்

இஸ்ரேல் காசா போர்ச்சூழலில் ஜேர்மனிக்கு வருகை தரும் முக்கிய புள்ளி

Share

இஸ்ரேல் காசா போர்ச்சூழலில் ஜேர்மனிக்கு வருகை தரும் முக்கிய புள்ளி

துருக்கி நாட்டின் ஜனாதிபதி, அடுத்த வாரம் ஜேர்மனிக்கு வருகை புரிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் காசா போர்ச்சூழலில், ஜேர்மனி இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறது. துருக்கியோ ஹமாஸுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகிறது.

இப்படி எதிரெதிர் கொள்கைகள் கொண்ட நாடுகளான துருக்கி மற்றும் ஜேர்மனி நாடுகளின் தலைவர்கள், இஸ்ரேல் காசா போர்ச்சூழலில், அடுத்த வராம் சந்திக்க இருப்பதால், அந்த விடயம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜேர்மனி வருகையின் நோக்கம்
துருக்கி ஜனாதிபதி எர்டகானும் (Recep Tayyip Erdogan), ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸும், மத்தியதரைக்கடல் பகுதியில் நிகழ்ந்துவரும் விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்த இருப்பதாக ஜேர்மன் அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்

அதே நேரத்தில், அடுத்த வாரம், ஜேர்மனியில், ஜேர்மன் அணிக்கும், துருக்கி அணிக்கும் இடையிலான கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. ஆனால், போட்டியை எர்டகான் காணச் செல்லமாட்டார் என கூறப்படுகிறது. எர்டகான் தீவிர கால்பந்து ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...