உலகம்செய்திகள்

இஸ்ரேல் காசா போர்ச்சூழலில் ஜேர்மனிக்கு வருகை தரும் முக்கிய புள்ளி

Share

இஸ்ரேல் காசா போர்ச்சூழலில் ஜேர்மனிக்கு வருகை தரும் முக்கிய புள்ளி

துருக்கி நாட்டின் ஜனாதிபதி, அடுத்த வாரம் ஜேர்மனிக்கு வருகை புரிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் காசா போர்ச்சூழலில், ஜேர்மனி இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறது. துருக்கியோ ஹமாஸுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகிறது.

இப்படி எதிரெதிர் கொள்கைகள் கொண்ட நாடுகளான துருக்கி மற்றும் ஜேர்மனி நாடுகளின் தலைவர்கள், இஸ்ரேல் காசா போர்ச்சூழலில், அடுத்த வராம் சந்திக்க இருப்பதால், அந்த விடயம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜேர்மனி வருகையின் நோக்கம்
துருக்கி ஜனாதிபதி எர்டகானும் (Recep Tayyip Erdogan), ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸும், மத்தியதரைக்கடல் பகுதியில் நிகழ்ந்துவரும் விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்த இருப்பதாக ஜேர்மன் அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்

அதே நேரத்தில், அடுத்த வாரம், ஜேர்மனியில், ஜேர்மன் அணிக்கும், துருக்கி அணிக்கும் இடையிலான கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. ஆனால், போட்டியை எர்டகான் காணச் செல்லமாட்டார் என கூறப்படுகிறது. எர்டகான் தீவிர கால்பந்து ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...