உலகம்செய்திகள்

கடவுளின் கோபத்துக்கு இஸ்ரேல் உள்ளாகும்: ஆக்ரோஷமான உரைக்கு மத்தியில் மயங்கி விழுந்த துருக்கி எம்.பி

5 18 scaled
Share

கடவுளின் கோபத்துக்கு இஸ்ரேல் உள்ளாகும்: ஆக்ரோஷமான உரைக்கு மத்தியில் மயங்கி விழுந்த துருக்கி எம்.பி

இஸ்ரேஸ் கடவுளின் கோபத்துக்கு உள்ளாகும் என துருக்கி நாட்டு எம்.பி நாடாளுமன்றத்தில் காட்டமாக பேசிவிட்டு மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் இடையே போர் தாக்குதலானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் துருக்கியின் செயல்பாடு குறித்து துருக்கி நாட்டின் நாடாளுமன்றத்தில் எம்.பி ஹசன் பித்மெஜ்(53) காட்டமாக பேசி கொண்டு இருந்தார்.

அப்போது வரலாறு அமைதியாக இருந்தாலும், உண்மை எப்போதும் அமைதியாக இருக்காது என அவர் துருக்கி அரசை விமர்சிக்கும் வகையில் பேசினார்.

அத்துடன் இஸ்ரேலை குறிப்பிட்டு பேசிய அவர், எங்களை அகற்றி விட்டால் பிரச்சனை இருக்காது என அவர்கள் நினைக்கிறார்கள், ஆனால் தவறுகளின் துன்பத்தில் இருந்து தப்பிக்க முடியாது.

வரலாற்றில் இருந்து நீங்கள் தப்பி விட்டாலும், கடவுளின் கோபத்தில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது என கோபத்துடன் பேசினார்.

மிகவும் ஆக்ரோஷமாக உரையாற்றி கொண்டு இருந்த எம்.பி ஹசன் பித்மெஜ்(53) உரையின் நடுவிலேயே நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு உருவானது, இந்த காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பு ஆகி கொண்டிருந்த நிலையில், எம்.பி ஹசன் பித்மெஜ் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கும் என கூறப்படும் நிலையில், அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக துருக்கி சுகாதார அமைச்சர் பரெத்தீன் கோகா தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...