21 12
உலகம்செய்திகள்

நெதன்யாகுவின் வீடு மீதான தாக்குதலையடுத்து இஸ்ரேல் வழங்கிய பதிலடி

Share

நெதன்யாகுவின் வீடு மீதான தாக்குதலையடுத்து இஸ்ரேல் வழங்கிய பதிலடி

இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலையடுத்து, லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

முன்னதாக, நெதன்யாகுவின் வீடு, ஹிஸ்புல்லாவின் ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்டது.

எனினும் இந்த தாக்குதலில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. எவ்வாறெனினும், ஹிஸ்புல்லா இதற்கு பெரிய விலையை கொடுக்க நேரிடும் என நெதன்யாகு நேற்றையதினம் (19.10.2024) தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இது கடந்த வாரத்தில் லெபனான் மீது பதிவான மிகப் பெரிய தாக்குதலாக கருதப்படுகின்றது.

மேலும், இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் அப்பகுதியிலுள்ள மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் அறிவித்த சில நிமிடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்கள் மதிப்பிடப்பட்டு வரும் நிலையில், குறைந்தது ஒரு பல மாடி கட்டிடமாவது முற்றாக தகர்க்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
21 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை தடகளப் பயிற்சியின் போது சோகம்: மாணவர் ஒருவர் திடீர் உயிரிழப்பு!

புத்தல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தடகளப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 11-ஆம் தர மாணவர் ஒருவர்,...

20 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மார்ச் 17 முதல் 20 வரை இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது: முக்கிய விவாதங்களுக்குத் திட்டம்!

பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர்...

19 8
செய்திகள்இலங்கை

அஸ்வெசும மார்ச் மாதக் கொடுப்பனவு: நாளை முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவை, நாளை (மார்ச் 12)...

18 10
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு விசாரணை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது: நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் அரசியல் எதிர்ப்புகளை இலக்கு வைத்தோ அல்லது...