0 JS313351750
உலகம்செய்திகள்

போர் பிரகடனம் செய்த இஸ்ரேல்… நிறைவேறிய இன்னொரு நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு

Share

போர் பிரகடனம் செய்த இஸ்ரேல்… நிறைவேறிய இன்னொரு நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு

ஹமாஸ் படைகளின் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் போர் பிரகடனம் அறிவித்த நிலையில் பிரெஞ்சு தத்துவஞானி நோஸ்ட்ராடாமஸின் திகைக்க வைக்கும் கணிப்பு ஒன்று நிறைவேறியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

பிரெஞ்சு தத்துவஞானி நோஸ்ட்ராடாமஸ் கடந்த 100 ஆண்டுகளில் நடந்த பல சம்பவங்களை கணித்துள்ளதுடன், அவை நிறைவேறியும் உள்ளது. இந்த நிலையில், 2023ல் ஒரு பெரும் போர் மூளும் அபாயம் குறித்து நோஸ்ட்ராடாமஸ் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹிட்லர் தொடங்கி, கென்னடி படுகொலை மட்டுமின்றி, 2022ல் விலைவாசி உயர்வால் உலக மக்கள் படும் அவதிகளும் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னர் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ள பல சம்பவங்கள் நிறைவேறியுள்ளது.

தற்போது இஸ்ரேல் போர் பிரகடனம் தொடர்பிலும் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். அதாவது, 7 மாதங்கள் நீடிக்கும் பெரும் போர், தீய செயல்களால் மக்கள் இறப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தொடக்கத்தில் இது உக்ரைன் மீதான ரஷ்யாவின் அத்துமீறல் தொடர்பான கணிப்பு என்றே நம்பப்பட்டது. ஆனால் தற்போது ஹமாஸ் படைகள் இஸ்ரேல் மீது தொடுத்த தாக்குதலும், அதற்கு பதிலடியாக இஸ்ரேல் அறிவித்துள்ள போர் பிரகடனமும் நோஸ்ட்ராடாமஸ் கணிப்பை உறுதி செய்வதாக கூறுகின்றனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தமது சமூக ஊடக பக்கத்தில் போர் பிரகடனம் குறித்து பதிவு செய்துள்ளார். ஏருசலேம் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அனைத்திலும் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டுள்ளது.

யூதர்களின் மத ரீதியான விடுமுறைகளின் கடைசி நாளில் ஹமாஸ் அமைப்பு அதிரடி தாக்குதலை முன்னெடுத்துள்ளது. ஹமாஸ் இலக்கு வைத்துள்ளதாக கூறப்படும் இஸ்ரேலின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்திற்காக போராடும் ஹமாஸ் அமைப்பினை இஸ்ரேல் உள்ளிட்ட பிரித்தானியா, கனடா, அமெரிக்கா மற்றும் பல எண்ணிக்கையிலான நாடுகள் தீவிரவாத குழு என்றே அடையாளப்படுத்தி வருகிறது.

ஆனால் 1946ல் வெளியான பாஸ்தீன வரைப்படமும், தற்போதைய வரைப்படமும் ஒப்பிட்டாலே இஸ்ரேல் முன்வைக்கும் அரசியல் புரியும் என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
image 1200x800 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக்...

image 1200x800 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும்?

இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால்,...

image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...