26 3
உலகம்செய்திகள்

தெற்கு காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்: நெருக்கடியில் இஸ்ரேலிய பிரதமர்

Share

தெற்கு காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்: நெருக்கடியில் இஸ்ரேலிய பிரதமர்

காசா பகுதியில் இஸ்ரேல் (Israel) தமது இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.

காசா பகுதியை இஸ்ரேலில் இருந்து பிரிக்கும் கெரெம் ஷாலோம் எல்லைப் பகுதியில் மட்டுமே போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்குமென இஸ்ரேல் குறிப்பிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்கு காசாவில் மனிதாபிமான உதவிக் குழுக்கள் உள் நுழைவதற்கு அனுமதி வழங்கியே இந்த போர்நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபாவில் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று இஸ்ரேலிய இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, பாலஸ்தீனத்திற்கு எதிராக தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்ரேல் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) பதவி விலகுமாறும் அந்நாட்டு மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் (united state of America) நிலைப்பாட்டை எதிர்த்தும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்து வருகிறது. தற்போது வரை 900க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...