6 5
உலகம்செய்திகள்

அடுத்தடுத்து காவு வாங்கும் இஸ்ரேல் : பலியான புதிய தலை – பின்வாங்குமா ஈரான்

Share

மத்திய தெஹ்ரானில் (Tehran) இலக்கு வைக்கப்பட்டு நடாத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், ஈரானின் முக்கிய தளபதி மேஜர் ஜெனரல் அலி ஷத்மானி (Ali Shadmani) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF)அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் மொசாட் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

ஜெனரல் அலி ஷத்மானி ஈரானின் மிக உயர்ந்த பதவியில் இருந்த இராணுவ அதிகாரி எனவும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Sayyid Ali Hosseini Khamenei) நெருங்கிய இராணுவ ஆலோசகர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெப்டினன்ட் ஜெனரல் கோலமாலி ரஷீத் சமீபத்தில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அலி ஷத்மானி கொள்ளப்பட்டுள்ளார்.

ஜூன் 13 அன்று ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இராணுவ இலக்குகளை குறி வைத்து தாக்குதல் மேற்கொண்டது.

அதற்கு எதிர்வினையாற்றும் வகையில், இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்களுக்கு நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி பதிலளித்தது ஈரான்.

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக தொடரும் ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் காரணமான உலக நாடுகள் அச்சத்தை எதிர் நோக்கியுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் மூத்த இராணுவத் தளபதியுமான மேஜர் ஜெனரல் அலி ஷத்மானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

மேலும் மூத்த இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் அலி ஷத்மானியின் மரணத்தை ஈரான் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

 

Share

Recent Posts

தொடர்புடையது
court
இலங்கைசெய்திகள்

நாடு கடத்தப்பட்ட சந்தேக நபர்கள் 90 நாட்கள் தடுப்புக் காவலில்: குண்டுச் சம்பவங்களுடன் தொடர்பு குறித்து விசாரணை!

இலங்கையில் நடந்த குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்டு, அண்மையில் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று...

w 1280h 720format jpgimgid 01k941vebwvgjntwjfmrjvf3ysimgname trump 1762146498940
செய்திகள்உலகம்

இரகசியமாக அணு ஆயுதப் பரிசோதனை செய்கின்றன: அமெரிக்காவும் பரிசோதிப்பதில் தவறில்லை – டொனால்ட் ட்ரம்ப்!

பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் இரகசியமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு...

Anil Ambani
இந்தியாசெய்திகள்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடன் மோசடி: அனில் அம்பானி குழுமத்தின் ₹ 7,500 கோடிக்கு அதிகமான சொத்துக்கள் முடக்கம்!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) மற்றும் அதன் இணை நிறுவனங்கள் மீதான கடன் மோசடி வழக்குகளைத் தொடர்ந்து,...

images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....