வீதியில் இறங்கிய ஆயிரக்கணக்கானோர்: கலவர பூமியான நாடு
உலகம்செய்திகள்

வீதியில் இறங்கிய ஆயிரக்கணக்கானோர்: கலவர பூமியான நாடு

Share

வீதியில் இறங்கிய ஆயிரக்கணக்கானோர்: கலவர பூமியான நாடு

நீதிமன்றங்களின் அதிகாரத்தை குறைக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டமானது ஆயிரக்கணக்கான மக்களை வீதியில் இறங்கி போராட வைத்துள்ளது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிய நீதித்துறை மறுசீரமைப்புக்கான முதல் மசோதாவுக்கு இஸ்ரேல் பாராளுமன்றம் திங்களன்று ஒப்புதல் அளித்தது.

சில அரசாங்க முடிவுகளை நியாயமற்றதாகக் கருதினால் அவற்றை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களை இந்த மசோதா கட்டுப்படுத்தும் என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு ஆயிரக்கணக்கான மக்கள் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே, சுமார் 95% மருத்துவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் இஸ்ரேலிய மருத்துவ சங்கம் 24 மணி நேர போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக கூறியது.

ஆனால், ஜெருசலேமில் மருத்துவ பராமரிப்பு மற்றும் நாடு முழுவதும் அவசர சிகிச்சைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என விளக்கமளித்துள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிய சட்டத்திருத்தமனாது இறுதி வாக்கெடுப்பில் 64-0 என வெற்றிபெற்றுள்ளது.

இந்த நிலையில், திங்கட்கிழமை இரவு ஜெருசலேமில் உள்ள பாராளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள தெருக்களில் சுமார் 20,000 மக்கள் நீலம் மற்றும் வெள்ளை கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உரிமைகளை விட்டுத்தர முடியாது எனவும் சர்வாதிகாரிக்கு அடிபணிய முடியாது எனவும் நெதன்யாகுவிடம் இருந்து இஸ்ரேலை காப்பாற்றுங்கள் எனவும் மக்கள் முழக்கமிட்டனர்.

கூட்டத்தை கலைக்க பொலிசார் தண்ணீர் பீச்சியடித்ஹ்துள்ளதுடன், கண்ணீர் குண்டுகளையும் வீசினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கலில் 19 பேர்கள் வரையில் கைதாகியுள்ளதாக தகவல் வெளியானது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...