வீதியில் இறங்கிய ஆயிரக்கணக்கானோர்: கலவர பூமியான நாடு
உலகம்செய்திகள்

வீதியில் இறங்கிய ஆயிரக்கணக்கானோர்: கலவர பூமியான நாடு

Share

வீதியில் இறங்கிய ஆயிரக்கணக்கானோர்: கலவர பூமியான நாடு

நீதிமன்றங்களின் அதிகாரத்தை குறைக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டமானது ஆயிரக்கணக்கான மக்களை வீதியில் இறங்கி போராட வைத்துள்ளது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிய நீதித்துறை மறுசீரமைப்புக்கான முதல் மசோதாவுக்கு இஸ்ரேல் பாராளுமன்றம் திங்களன்று ஒப்புதல் அளித்தது.

சில அரசாங்க முடிவுகளை நியாயமற்றதாகக் கருதினால் அவற்றை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களை இந்த மசோதா கட்டுப்படுத்தும் என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு ஆயிரக்கணக்கான மக்கள் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே, சுமார் 95% மருத்துவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் இஸ்ரேலிய மருத்துவ சங்கம் 24 மணி நேர போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக கூறியது.

ஆனால், ஜெருசலேமில் மருத்துவ பராமரிப்பு மற்றும் நாடு முழுவதும் அவசர சிகிச்சைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என விளக்கமளித்துள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிய சட்டத்திருத்தமனாது இறுதி வாக்கெடுப்பில் 64-0 என வெற்றிபெற்றுள்ளது.

இந்த நிலையில், திங்கட்கிழமை இரவு ஜெருசலேமில் உள்ள பாராளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள தெருக்களில் சுமார் 20,000 மக்கள் நீலம் மற்றும் வெள்ளை கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உரிமைகளை விட்டுத்தர முடியாது எனவும் சர்வாதிகாரிக்கு அடிபணிய முடியாது எனவும் நெதன்யாகுவிடம் இருந்து இஸ்ரேலை காப்பாற்றுங்கள் எனவும் மக்கள் முழக்கமிட்டனர்.

கூட்டத்தை கலைக்க பொலிசார் தண்ணீர் பீச்சியடித்ஹ்துள்ளதுடன், கண்ணீர் குண்டுகளையும் வீசினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கலில் 19 பேர்கள் வரையில் கைதாகியுள்ளதாக தகவல் வெளியானது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக்...

image 1200x800 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும்?

இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால்,...

image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...