ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு: எச்சரிக்கை விடுத்த இராணுவ தளபதி
உலகம்செய்திகள்

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு: எச்சரிக்கை விடுத்த இராணுவ தளபதி

Share

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு: எச்சரிக்கை விடுத்த இராணுவ தளபதி

பிரித்தானியாவை சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதிகள் நாட்டில் பெரும் தாக்குதலுக்கு திட்டமிட்டு வருவதாக ராணுவ தளபதி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈராக்கின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் மூத்த அதிகாரியான தளபதி அப்துல் வஹாப் எல்-சாதி விடுத்துள்ள எச்சரிக்கையில், பிரித்தானியாவை தங்களின் அடுத்த இலக்காக மாற்ற ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தளபதி அப்துல் வஹாப் எல்-சாதி தெரிவிக்கையில், அவரது கோல்டன் டிவிஷன் சிறப்புப் படைப் பிரிவு பாலைவன மறைவிடத்தின் மீது நடத்திய சோதனையின் போது அதிர்ச்சியூட்டும் பல திட்டங்களைக் கண்டுபிடித்ததாக கூறியுள்ளார்.

ஈராக்குக்கு வெளியே, ஐஎஸ் தீவிரவாதிகளில் முதன்மையான இலக்கு பிரித்தானியா என அதில் இருந்து கண்டறிந்ததாக தெரிவித்துள்ளார். பிரித்தானியா மீதான தாக்குதல் திட்டங்களுக்கு பிரித்தானிய நாட்டவர்களான ஐஎஸ் தீவிரவாதிகளையே அவர்கள் பயன்படுத்த இருப்பதாகவும் தளபதி அப்துல் வஹாப் எல்-சாதி குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தங்களது அமைப்பு அந்த தாக்குதல் திட்டங்களை முறியடிக்க துணிந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அதிகம் புழங்கும் பகுதிகள் அல்லது அதிக மக்கள் வாழும் பகுதிகளை அவர்கள் இலக்கு வைத்துள்ளதாகவும், ஆனால், வெடிகுண்டு தாக்குதலா அல்லது துப்பாக்கிச் சூடு சம்பவமா என்பது தொடர்பில் தங்களால் உறுதி செய்ய முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இப்படியான ஒரு தாக்குதல் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டால் அதன் பின்னணியில் அவர்கள் என உறுதி செய்யலாம் என்றார். மேலும், தங்களுக்கு கிடைத்துள்ள மொத்த தரவுகளையும் பிரித்தானிய நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் தளபதி அப்துல் வஹாப் எல்-சாதி குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பாவில் பிரித்தானியா, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஜேர்மனி ஆகிய நான்கு நாடுகளை அவர்கள் தெரிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 1999ல் நிறுவப்பட்ட ஐ.எஸ் அமைப்பானது 2010 மத்தியில் ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளை கைப்பற்றியதுடன் பல சர்வதேச பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்தியது.

2015ல் பாரிஸ் தாக்குதல் சம்பவத்தில் 131 பேர் கொல்லப்பட்டனர். 2017 மான்செஸ்டர் அரங்கம் வெடிகுண்டு தாக்குதலில் சிறார்கள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...