tamilnaadi 98 scaled
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஒரே நாளில் 13 கைதிகளுக்கு மரண தண்டனை

Share

ஈராக்கில் ஒரே நாளில் 13 கைதிகளுக்கு மரண தண்டனை

ஈராக் டெஹரானில் பல்வேறு குற்றச்செயல்களில் தண்டனை விதிக்கப்பட்ட 13 சிறை கைதிகளுக்கு திடீரென ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈராக்கின் தெற்கு மாகாணத்தில் உள்ள நஸ்ரியாக் சிறையில் 13 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்போவதாக ஒலிபெருக்கியில் சிறை நிர்வாகம் கடந்த 24 ஆம் திகதி அறிவித்திருந்தது.

இதன்படி, மறுநாள் 25 ஆம் திகதி அதிகாலை 13 கைதிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றியதாக கூறப்படுகின்றது.

இருப்பினும் ஈராக் அரசு முன்னர் பெரும் குற்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் குடும்பத்தினருக்கு முறையான அறிவிப்பு வழங்கிய பின்னரே தண்டனையை நிறைவேற்றி வந்துள்ளது.

இந்நிலையில், 13 சிறைகைதிகளுக்கு திடீரென மரண தண்டனை நிறைவேற்றியமைக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...