24 661be3175feac
உலகம்செய்திகள்

போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

Share

போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாரிய போர் ஏற்படும் என்ற அச்சம் சர்வதேச ரீதியாக எழுந்துள்ள நிலையில், அந்த அலை தற்போது குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேன் மீது பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் இன்று காலையுடன் நிறைவடைந்துள்ளதாக ஐ.நா சபைக்கான ஈரானின் விசேட வதிவிட பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமது பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவோ இஸ்ரேல் எதிர்வினையாற்ற முயற்சித்தால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது.

எம் மீது தாக்குதல் நடத்தினால் பல மடங்காக திருப்பியடிப்போம் என ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் முகமது பாகேரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் எங்கள் பதில் இன்றிரவு இராணுவ நடவடிக்கையை விட பெரியதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அரச தொலைக்காட்சிக்கு கருத்து வெளியிட்டவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்கினால், அமெரிக்காவின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஈரான் மீது வலிந்த தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டால் அதற்கு ஆதரவு வழங்க மாட்டோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதேவேளை, இஸ்ரேல் மீதான பதிலடித் தாக்குதல்களை நடத்துவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக ஈரான் தனது அண்டை நாடுகளுக்கு அறிவித்ததாக வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...