25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

Share

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பயா (Baya), ஜாபர் (Jafar) மற்றும் கோவ்சர் (Kowsar) ஆகிய மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களே இவ்வாறு ஒரே ராக்கெட் மூலம் செலுத்தப்படவுள்ளன.

இது குறித்து, ஐ.எஸ்.ஏ எனப்படும் ஈரான் விண்வெளி அமைப்பின் (Iran Space Agency – ISA) தலைவர் ஹசன் சலாரியே கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகள் விதித்த பல்வேறு தடைகள் இருந்த போதும், விண்வெளித் திட்டத்தில் பெரிய முன்னேற்றங்களை ஈரான் கண்டுள்ளது.”

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பயா, ஜாபர் மற்றும் கோவ்சர் ஆகிய மூன்று செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இந்தச் செயற்கைக்கோள்கள் விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை தொடர்பான தரவுகளை வழங்கும். இதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...