25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

Share

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பயா (Baya), ஜாபர் (Jafar) மற்றும் கோவ்சர் (Kowsar) ஆகிய மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களே இவ்வாறு ஒரே ராக்கெட் மூலம் செலுத்தப்படவுள்ளன.

இது குறித்து, ஐ.எஸ்.ஏ எனப்படும் ஈரான் விண்வெளி அமைப்பின் (Iran Space Agency – ISA) தலைவர் ஹசன் சலாரியே கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகள் விதித்த பல்வேறு தடைகள் இருந்த போதும், விண்வெளித் திட்டத்தில் பெரிய முன்னேற்றங்களை ஈரான் கண்டுள்ளது.”

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பயா, ஜாபர் மற்றும் கோவ்சர் ஆகிய மூன்று செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இந்தச் செயற்கைக்கோள்கள் விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை தொடர்பான தரவுகளை வழங்கும். இதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world
செய்திகள்இந்தியா

சீமான் பின்னடைவு: தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பிரபு முன்னிலை!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...

Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...