default
உலகம்செய்திகள்

ஈரானில் 14-வது நாளாகத் தொடரும் போராட்டம்: 116 பேர் உயிரிழப்பு; போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை!

Share

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம், தற்போது நாட்டின் 180 நகரங்களுக்குப் பரவி, 14-வது நாளாகத் தீவிரமடைந்துள்ளது.

பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல்களில் இதுவரை குறைந்தது 116 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 9 சிறுவர்களும் அடங்குவர் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. (சில ஊடகங்கள் உயிரிழப்பு எண்ணிக்கை 200-ஐத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கின்றன).

நாடு முழுவதும் இதுவரை 2,600-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் வைத்தியசாலைகள் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிவதாகவும், இரத்தப் பற்றாக்குறை நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி, இந்தப் போராட்டங்களை “அமெரிக்காவை மகிழ்விப்பதற்காக முன்னெடுக்கப்படும் நாசவேலை” எனச் சாடியுள்ளார்.

“போராட்டங்களில் ஈடுபடுவோர் ‘கடவுளின் எதிரிகளாக’ (Enemies of God) கருதப்படுவார்கள். இது மரண தண்டனைக்குரிய குற்றமாகும்” என அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

ஐ.நா.விற்கு கடிதம்: ஈரானை நிலைகுலையச் செய்ய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தூண்டுதல்களை வழங்குவதாகக் குற்றம்சாட்டி, ஈரான் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானிய மக்கள் சுதந்திரத்தை எதிர்பார்ப்பதாகவும், போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரான் வன்முறையைப் பயன்படுத்தினால் அமெரிக்கா இராணுவ ரீதியாகத் தலையிடத் தயார் (Locked and Loaded) என்றும் எச்சரித்துள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...