24 664a99327a9bb
உலகம்செய்திகள்

ரைசியின் விபத்து ஈரான் மக்களுக்கு கிடைத்த நற்செய்தி?

Share

ரைசியின் விபத்து ஈரான் மக்களுக்கு கிடைத்த நற்செய்தி?

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் ஆபத்தான தரையிறக்கத்தை சந்தித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க செனட்டரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் அஜர்பைஜான் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் மோசகமாக தரையிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திடீர் விபத்தை தொடர்ந்து ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நலம் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இது உலக அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, ஜூன் 2021 ல் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதியாக தெரிவாகும் முன்பே ஈரானில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஈரான் ஜனாதிபதி ரைசின் பயணித்த ஹெலிகாப்டரில் ஏற்பட்ட விபத்தை வரவேற்கும் விதமாக அமெரிக்க குடியரசுக் கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிக் ஸ்காட் பரபரப்பான கருத்து ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “ரைசி யாராலும் நேசிக்கப்படவில்லை அல்லது மதிக்கப்படவில்லை, அவர் இறந்தால் யாரும் வருத்தப்பட மாட்டார்கள். அவர் மறைந்தால், கொலைகார சர்வாதிகாரிகளிடமிருந்து தங்கள் நாட்டை மீட்டெடுக்க ஈரானிய மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டார்.

ஸ்காட்டின் கருத்துக்கள் மத்திய கிழக்கில் உள்ள பல அமெரிக்க கூட்டாளிகள் உட்பட, ரைசியின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவிக்கும் ஏராளமான வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் நாடுகளின் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்டவை.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...