24 664a99327a9bb
உலகம்செய்திகள்

ரைசியின் விபத்து ஈரான் மக்களுக்கு கிடைத்த நற்செய்தி?

Share

ரைசியின் விபத்து ஈரான் மக்களுக்கு கிடைத்த நற்செய்தி?

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் ஆபத்தான தரையிறக்கத்தை சந்தித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க செனட்டரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் அஜர்பைஜான் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் மோசகமாக தரையிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திடீர் விபத்தை தொடர்ந்து ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நலம் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இது உலக அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, ஜூன் 2021 ல் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதியாக தெரிவாகும் முன்பே ஈரானில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஈரான் ஜனாதிபதி ரைசின் பயணித்த ஹெலிகாப்டரில் ஏற்பட்ட விபத்தை வரவேற்கும் விதமாக அமெரிக்க குடியரசுக் கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிக் ஸ்காட் பரபரப்பான கருத்து ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “ரைசி யாராலும் நேசிக்கப்படவில்லை அல்லது மதிக்கப்படவில்லை, அவர் இறந்தால் யாரும் வருத்தப்பட மாட்டார்கள். அவர் மறைந்தால், கொலைகார சர்வாதிகாரிகளிடமிருந்து தங்கள் நாட்டை மீட்டெடுக்க ஈரானிய மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டார்.

ஸ்காட்டின் கருத்துக்கள் மத்திய கிழக்கில் உள்ள பல அமெரிக்க கூட்டாளிகள் உட்பட, ரைசியின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவிக்கும் ஏராளமான வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் நாடுகளின் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்டவை.

Share

Recent Posts

தொடர்புடையது
1760409734 2952
செய்திகள்உலகம்

வர்த்தகப் போர் தணிவு: அமெரிக்கப் பொருட்களுக்கான 24% வரியை ஓராண்டுக்குத் தற்காலிகமாக நிறுத்தியது சீனா!

அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் பதட்டங்களைக் குறைக்கும் நடவடிக்கையாக, அமெரிக்கப் பொருட்களுக்கான 24 சதவீத...

227670
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் விவாகரத்து அதிகரிப்பு: ‘4 லட்சம் தம்பதிகள் பிரிந்தனர்; சமூக ஊடக அடிமைத்தனம் ஆபத்து’ – அமைச்சர் எச்சரிக்கை!

இந்தோனேஷியாவில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 4 லட்சம் தம்பதிகள் விவாகரத்து செய்துள்ள நிலையில், திருமண...

aONVWpw1
செய்திகள்உலகம்

பயங்கரவாதத்தை தூண்டியதாகக் குற்றச்சாட்டு: சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக் பங்களாதேஷ் நுழையத் தற்காலிகத் தடை!

பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாகப் பேசியதாகவும், நிகழ்ச்சிகளை நடத்தியதாகவும் குற்றச்சாட்டுக்கு உள்ளான சர்ச்சைக்குரிய முஸ்லிம் மதபோதகர் ஜாகிர்...

23 645227426bdff
செய்திகள்அரசியல்இலங்கை

13வது திருத்தம் விவாதத்தை நிறுத்துங்கள்: சுயநிர்ணய உரிமைக்கு ஐ.நா. தீர்மானம் 1514-ன் கீழ் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் – அமெரிக்கத் தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்பு!

இலங்கையின் காலனித்துவக் கட்டமைப்புக்குள் தமிழர்களைச் சிக்க வைக்கும் 13ஆவது திருத்தம், கூட்டாட்சி அல்லது நிர்வாக சபைகள்...