24 664a99327a9bb
உலகம்செய்திகள்

ரைசியின் விபத்து ஈரான் மக்களுக்கு கிடைத்த நற்செய்தி?

Share

ரைசியின் விபத்து ஈரான் மக்களுக்கு கிடைத்த நற்செய்தி?

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் ஆபத்தான தரையிறக்கத்தை சந்தித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்க செனட்டரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் அஜர்பைஜான் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் மோசகமாக தரையிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திடீர் விபத்தை தொடர்ந்து ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நலம் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இது உலக அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, ஜூன் 2021 ல் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதியாக தெரிவாகும் முன்பே ஈரானில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஈரான் ஜனாதிபதி ரைசின் பயணித்த ஹெலிகாப்டரில் ஏற்பட்ட விபத்தை வரவேற்கும் விதமாக அமெரிக்க குடியரசுக் கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிக் ஸ்காட் பரபரப்பான கருத்து ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “ரைசி யாராலும் நேசிக்கப்படவில்லை அல்லது மதிக்கப்படவில்லை, அவர் இறந்தால் யாரும் வருத்தப்பட மாட்டார்கள். அவர் மறைந்தால், கொலைகார சர்வாதிகாரிகளிடமிருந்து தங்கள் நாட்டை மீட்டெடுக்க ஈரானிய மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டார்.

ஸ்காட்டின் கருத்துக்கள் மத்திய கிழக்கில் உள்ள பல அமெரிக்க கூட்டாளிகள் உட்பட, ரைசியின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவிக்கும் ஏராளமான வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் நாடுகளின் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்டவை.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...