24 6650fab35e776
உலகம்செய்திகள்

இப்ராஹீம் ரைசிக்கு நேர்ந்த விபத்து : புலனாய்வாளர்களின் அறிக்கை

Share

இப்ராஹீம் ரைசிக்கு நேர்ந்த விபத்து : புலனாய்வாளர்களின் அறிக்கை

ஈரானின் ஜனாதிபதி உட்பட பலர் உயிரிழந்த விபத்து தொடர்பாக ஈரானிய இராணுவம் தனது முதல் விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

விமானக் குழுவினருக்கும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கும் இடையிலான உரையாடல்களில் சந்தேகத்திற்குரிய எந்த விடயமும் இடம்பெறவில்லை புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரானின் வடமேற்கு மாகாணமான கிழக்கு அஜர்பைஜானில் ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.

இதில் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உட்பட 8 பேரும் உயிரிழந்தனர்.

சீரற்ற காலநிலையே விபத்துக்குக் காரணம் என மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் அசாதாரண வானிலை எதுவும் இல்லை என்று மற்றொரு மூத்த அதிகாரி கூறியுள்ளார்.

உலங்கு வானூர்தி திட்டமிட்ட பாதையில் சென்று கொண்டிருந்த போது மலையில் மோதி தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இடிபாடுகளில் துப்பாக்கிச்சூடு தடயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்படுவதற்கு 90 வினாடிகளுக்கு முன்பு விமானி குழுவில் உள்ள மற்ற இரண்டு உலங்குவானூர்திகளுடன் தொடர்பு கொண்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானக் குழுவினருக்கும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கும் இடையே நடந்த உரையாடலில் அசாதாரணமான எதுவும் கேட்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படும் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...