5 10
உலகம்செய்திகள்

அடுத்தகட்ட தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்! அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த பெஞ்சமின் நெதன்யாகு

Share

அமெரிக்காவை தாக்கக்கூடிய அணு ஆயுத ஏவுகணையை ஈரான் உருவாக்கிவருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, Ben Shapiro-வுடன் நடத்திய நேர்காணலிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“ஈரான் 8,000 கி.மீ. தூரம் செல்லக்கூடிய ICBM ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. மேலும், 3,000 கி.மீ. சேர்த்தால் அமெரிக்காவின் கிழக்கு கரையை அடைய முடியும்” என எச்சரித்துள்ளார்.

“அமெரிக்காவின் நியூயார்க், பாஸ்டன், வாஷிங்டன், மியாமி போன்ற நகரங்களை அணு ஆயுதங்களால் மிரட்டும் நிலைக்கு ஈரான் வருகிறது.

“அமெரிக்காவிற்கு மரணம்’ என கோஷமிடுபவர்கள் ஏவுகணை ஆயுதங்களை வைத்திருப்பது மிகப்பெரிய அபாயம்” என்றும், இஸ்ரேல் அந்த அபாயத்தை தடுக்கும் பணியில் சிறப்பாக செயல்படுகிறது.

மேலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் முக்கியத்துவத்தை நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் உருவாக்கும் பாதுகாப்பு ஆயுதங்கள் உலகிலேயே மிக மேம்பட்டவை.

இவை அமெரிக்காவுடன் பகிரப்பட்டுள்ளன. ISIS மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளால் ஏற்படும் விமான தாக்குதல்களை இஸ்ரேல் புலனாய்வு தடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

காசா போர் குறித்து பேசுகையில், “இது முடிவடையும் நிலையில் உள்ளது. ஆனால், ஹமாஸ் ஆட்சி தொடரும் வரை நிச்சயமாக முடிவடையாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...