11 10
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்தில் ஊடுருவிய ஈரான்

Share

டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்தில் ஊடுருவிய ஈரான்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்(Donald Trump) தேர்தல் பிரசாரம் ஊடுருவல் (ஹேக்) செய்யப்பட்டுள்ளதாகவும், ஈரானிய தரப்பினர் முக்கிய உள் ஆவணங்களைத் திருடி விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் ஈரானின் ஈடுபாட்டிற்கான குறிப்பிட்ட ஆதாரங்களை, ட்ரம்பின் பிரசார பிரிவு வழங்கவில்லை.

இருப்பினும் 2024 இல் அமெரிக்க பிரசாரத்தில் தலையிட வெளிநாட்டு முகவர்களின் முயற்சிகளை விபரிக்கும் அறிக்கையை மைக்ரோசாப்ட் வெளியிட்ட ஒரு நாளுக்குப் பின்னர் இந்த குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரம்பின் முன்னாள் மூத்த ஆலோசகரின் மின்னஞ்சல் கணக்கிலிருந்து ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் உயர் அதிகாரிக்கு, கடந்த ஜூன் மாதம் ஈரானிய இராணுவ புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை ஒன்றை அனுப்பிய ஒரு உதாரணம், இந்த குற்றச்சாட்டுக்கு மேற்கோளிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த குற்றச்சாட்டை ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் பிரதிநிதிகள் மறுத்துள்ளனர்.

இருப்பினும், ஈரான், மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் உள்ள தனது எதிரிகளை குறிவைத்து ஊடுருவல் (ஹேக்கிங்)பிரசாரங்களை நடத்துவதாக நீண்ட காலமாக சந்தேகிக்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு ட்ரோன் தாக்குதலில் முக்கியப் புரட்சிக் காவலர் ஜெனரல் காசிம் சுலைமானியைக் கொன்ற ட்ரம்ப் மீது பதிலடி கொடுக்கவுள்ளதாக தெஹ்ரான் நீண்டகாலமாக அச்சுறுத்தி வருகிறது.

இதற்கிடையில் அமெரிக்க நீதித்துறை கடந்த வாரம் ஈரானுடன் உறவு கொண்ட ஒரு பாகிஸ்தானியர் மீதான குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

அமெரிக்காவில் ட்ரம்ப் உட்பட அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக படுகொலை முயற்சிகளை சதி செய்ததாக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...