24 664adc2ddfd4d 1
உலகம்செய்திகள்

ஈரான் ஜனாதிபதியின் மரணம் தொடர்பில் கூகுளின் அறிவிப்பு

Share

ஈரான் ஜனாதிபதியின் மரணம் தொடர்பில் கூகுளின் அறிவிப்பு

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விமான விபத்தில் ஈரான் ஜனாதிபதி ரைசி மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் உயிரிழந்ததை ஈரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

உலங்கு வானூர்தியில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரது மரணத்தை கூகுள் உறுதி செய்துள்ளது. அவரது பெயரை கூகிளில் தேடும் போது முன்னாள் ஜனாதிபதி என்றே காட்சிப்படுத்தப்படுகிறது.

பொதுவாக ஒரு ஜனாதிபதி உயிரிழந்தால் அல்லது பதவி விலகினால் கூகுள் தேடுதளத்தில் அது முன்னாள் ஜனாதிபதி என்று காட்டும்.

இவ்வாறான நிலையில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த உலங்கு வானூர்தி அஜர்பைஜான் மற்றும் ஈரான் எல்லையில் உள்ள மலைப் பகுதியில் காணாமல் போன நிலையில் அதன் சிதைவுகள் மீட்பு பணியாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பின்னர் அவர் உயிரிழந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...