24 664bd8599cd9d
உலகம்செய்திகள்

ஜனாதிபதியின் மரணம் சதி என அறிந்தால்… உலகப் போர் உறுதி

Share

ஜனாதிபதியின் மரணம் சதி என அறிந்தால்… உலகப் போர் உறுதி

ஈரானிய ஜனாதிபதியின் மரணத்திற்கு பின்னால் எதிரியின் கை இருப்பதாக தெரிய வந்தால், உலகப் போர் உறுதி என்றே நிபுணர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Bell 212 ஹெலிகொப்டரின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மிக மோசமான வானிலை காரணமாகவே விபத்து நேர்ந்திருக்கலாம் என ஈரான் தரப்பு நம்புகிறது.

இந்த நிலையில் மக்களுக்கான பணியில் ஈடுபட்டிருக்கும் போது ஜனாதிபதி ரைசி வீர மரணமடைந்துள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. இதனிடையே, அவசர அமைச்சரவை கூட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட, அதில் ஜனாதிபதியின் ஆசனம் காலியாக இருந்தது என்றே தகவல் வெளியானது.

இதனிடையே, ஈரானிய ஊடகவியலாளர் ஒருவர் தெரிவிக்கையில், இந்த விபத்தின் பின்னணி தொடர்பில் உலக நாடுகளைவிட ஈரான் தனிக்கவனமெடுத்து விசாரிக்கும் என்றார்.

இந்த பேரிழப்பின் பின்னணியில் இன்னொரு நாடு இருப்பதாக உறுதியானால், அல்லது எதிரி நாட்டுடன் இன்னொருவர் இணைந்து செயல்பட்டார் என்றால், ஈரானிடம் இருந்து கடுமையான எதிர்வினையை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

ஜனாதிபதி ரைசியின் இறப்புக்கு பின்னார் தீவிரவாத தொடர்பு உறுதியானால், உலகப் போர் உறுதி என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு சாதாரண விபத்து என்று நம்ப ஈரானிய மக்கள் தயாராக இல்லை என்றும்,

உயர் மட்டத்தால் அந்த ஹெலிகொப்டர் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது என்றும், அதிகாரிகள் தரப்பில், இது வெறும் விபத்து என நம்ப மறுப்பதாகவும் அந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா அல்லது இஸ்ரேல் நாடுகளின் கை இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். ஆனால் ஈரான் தரப்பில் அல்லது அந்த நாடுகள் தரப்பில் இன்னும் இதை உறுதி செய்யவில்லை.

இப்ராஹிம் ரைசியின் இறப்பை அடுத்து நாடு முழுவதும் 5 நாட்கள் துக்கமனுசரிக்கப்படுகிறது. மேலும், உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடபப்ட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...