16 8
உலகம்செய்திகள்

ஒரே ஆண்டில் 900-க்கும் மேற்பட்டோரை தூக்கிலிட்ட நாடு: ஐ.நா மனித உரிமைகள் கவலை

Share

ஒரே ஆண்டில் 900-க்கும் மேற்பட்டோரை தூக்கிலிட்ட நாடு: ஐ.நா மனித உரிமைகள் கவலை

கடந்த 9 ஆண்டுகளில் அதிகபட்சமாக ஈரானில் 2024ல் 900-க்கும் மேற்பட்டோர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

ஈரானில் கடந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றங்களில் கூர்மையான அதிகரிப்பு ஏற்பட்டு இருப்பது குறித்த கவலையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தலைவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வோல்கர் டர்க் (Volker Türk) வழங்கிய தகவலில், 2024 ஆம் ஆண்டில் குறைந்தது 901 பேர் தூக்கிலிடப்பட்டதாகவும், இது 2023 ஆம் ஆண்டில் பதிவான 853 பேரை விட கணிசமான அதிகரிப்பைக் குறிக்கிறது என்றும் தெரிவித்தார்.

இந்த மோசமான எண்ணிக்கை கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றங்களில் அதிகபட்சமாகும்.

“ஈரானிய அதிகாரிகள் இந்த அச்சுறுத்தும் போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும்.” என்றும் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மரண தண்டனைக்கு முக்கிய காரணமாக இருந்தாலும், எதிர்ப்பாளர்கள் மற்றும் 2022 ஆம் ஆண்டு போராட்டங்களுடன் தொடர்புடைய நபர்கள் தூக்கிலிடப்பட்டதையும் ஐக்கிய நாடுகள் எடுத்துக்காட்டுகின்றன.

மேலும் தூக்கிலிடப்பட்ட பெண்களின் எண்ணிக்கையும் கவலைக்குரிய அளவில் அதிகரித்துள்ளது.

2010 முதல் 2024வரை, ஈரானில் 241 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது, 2024ல் மட்டும் 31 பெண்களுக்கு ஈரான் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் புள்ளிவிவரங்கள் ஈரான் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் செய்தி நிறுவனம் (HRANA), ஈரான் மனித உரிமைகள் (IHR) மற்றும் ஹெங்காவ் உள்ளிட்ட நம்பகமான ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உள்ளன.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...