16 8
உலகம்செய்திகள்

ஒரே ஆண்டில் 900-க்கும் மேற்பட்டோரை தூக்கிலிட்ட நாடு: ஐ.நா மனித உரிமைகள் கவலை

Share

ஒரே ஆண்டில் 900-க்கும் மேற்பட்டோரை தூக்கிலிட்ட நாடு: ஐ.நா மனித உரிமைகள் கவலை

கடந்த 9 ஆண்டுகளில் அதிகபட்சமாக ஈரானில் 2024ல் 900-க்கும் மேற்பட்டோர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

ஈரானில் கடந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றங்களில் கூர்மையான அதிகரிப்பு ஏற்பட்டு இருப்பது குறித்த கவலையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தலைவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வோல்கர் டர்க் (Volker Türk) வழங்கிய தகவலில், 2024 ஆம் ஆண்டில் குறைந்தது 901 பேர் தூக்கிலிடப்பட்டதாகவும், இது 2023 ஆம் ஆண்டில் பதிவான 853 பேரை விட கணிசமான அதிகரிப்பைக் குறிக்கிறது என்றும் தெரிவித்தார்.

இந்த மோசமான எண்ணிக்கை கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றங்களில் அதிகபட்சமாகும்.

“ஈரானிய அதிகாரிகள் இந்த அச்சுறுத்தும் போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும்.” என்றும் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மரண தண்டனைக்கு முக்கிய காரணமாக இருந்தாலும், எதிர்ப்பாளர்கள் மற்றும் 2022 ஆம் ஆண்டு போராட்டங்களுடன் தொடர்புடைய நபர்கள் தூக்கிலிடப்பட்டதையும் ஐக்கிய நாடுகள் எடுத்துக்காட்டுகின்றன.

மேலும் தூக்கிலிடப்பட்ட பெண்களின் எண்ணிக்கையும் கவலைக்குரிய அளவில் அதிகரித்துள்ளது.

2010 முதல் 2024வரை, ஈரானில் 241 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது, 2024ல் மட்டும் 31 பெண்களுக்கு ஈரான் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் புள்ளிவிவரங்கள் ஈரான் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் செய்தி நிறுவனம் (HRANA), ஈரான் மனித உரிமைகள் (IHR) மற்றும் ஹெங்காவ் உள்ளிட்ட நம்பகமான ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உள்ளன.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...