18 9
உலகம்செய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல் : அணுசக்தி நிலையம் அருகே பயிற்சிகளை தொடங்கியது ஈரான்

Share

பாதுகாப்பு அச்சுறுத்தல் : அணுசக்தி நிலையம் அருகே பயிற்சிகளை தொடங்கியது ஈரான்

ஈரான் (iran)இராணுவம் நாடு முழுவதும் திட்டமிடப்பட்ட பயிற்சிகளின் ஒரு பகுதியாக நாட்டின் மையத்தில் உள்ள Natanz அணுசக்தி செறிவூட்டல் ஆலைக்கு அருகில் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது என்று அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்தன.

காதம் அல்-அன்பியா வான் பாதுகாப்பு தளத்தின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் காதர் ரஹிம்சாதேவின் உத்தரவின் கீழ், நடான்ஸ் அணுமின் நிலையத்தின் வான் பாதுகாப்பு மண்டலத்தில், எக்டேதார் (அதிகாரம்) 1403 என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட இராணுவப் பயிற்சியின் முதல் கட்டம் தொடங்கியது.

செவ்வாயன்று(07) “எக்டேதார் 1403” பயிற்சியின் முதல் கட்டத்தின் தொடக்கத்தை அறிவித்த பிரிகேடியர் ஜெனரல் ரஹிம்சாதே, இந்த இராணுவப் பயிற்சியின் போது, இஸ்லாமிய புரட்சிக் காவலர்களின் (IRGC) வான்வெளிப் படையின் வான் பாதுகாப்புப் பிரிவுகள் விரிவான பாதுகாப்பை வழங்குகின்றன என்றார்.

திங்களன்று, புரட்சி காவலர் படையின் செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி, மார்ச் நடுப்பகுதி வரை ஈரானின் பிற பகுதிகளையும் உள்ளடக்கும் வகையிலான பயிற்சிகள், “புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு” பதிலளிக்கும் வகையில், விவரிக்கப்படாமல் நடத்தப்படுகின்றன என்றார்.

கட்நத ஒக்டோபர் மாதம் ஈரானிய இராணுவ தளங்கள் மீது இஸ்ரேலிய(israel) தாக்குதல்கள் – தெஹ்ரானால் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது.ஈரானின் பெரும்பாலான வான் பாதுகாப்பு அமைப்புகள் தகர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது, இதில் ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட நான்கு S-300 வான் பாதுகாப்பு அமைப்புகள் அடங்கும்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...