உலகம்செய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல் : அணுசக்தி நிலையம் அருகே பயிற்சிகளை தொடங்கியது ஈரான்

Share
18 9
Share

பாதுகாப்பு அச்சுறுத்தல் : அணுசக்தி நிலையம் அருகே பயிற்சிகளை தொடங்கியது ஈரான்

ஈரான் (iran)இராணுவம் நாடு முழுவதும் திட்டமிடப்பட்ட பயிற்சிகளின் ஒரு பகுதியாக நாட்டின் மையத்தில் உள்ள Natanz அணுசக்தி செறிவூட்டல் ஆலைக்கு அருகில் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது என்று அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்தன.

காதம் அல்-அன்பியா வான் பாதுகாப்பு தளத்தின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் காதர் ரஹிம்சாதேவின் உத்தரவின் கீழ், நடான்ஸ் அணுமின் நிலையத்தின் வான் பாதுகாப்பு மண்டலத்தில், எக்டேதார் (அதிகாரம்) 1403 என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட இராணுவப் பயிற்சியின் முதல் கட்டம் தொடங்கியது.

செவ்வாயன்று(07) “எக்டேதார் 1403” பயிற்சியின் முதல் கட்டத்தின் தொடக்கத்தை அறிவித்த பிரிகேடியர் ஜெனரல் ரஹிம்சாதே, இந்த இராணுவப் பயிற்சியின் போது, இஸ்லாமிய புரட்சிக் காவலர்களின் (IRGC) வான்வெளிப் படையின் வான் பாதுகாப்புப் பிரிவுகள் விரிவான பாதுகாப்பை வழங்குகின்றன என்றார்.

திங்களன்று, புரட்சி காவலர் படையின் செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி, மார்ச் நடுப்பகுதி வரை ஈரானின் பிற பகுதிகளையும் உள்ளடக்கும் வகையிலான பயிற்சிகள், “புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு” பதிலளிக்கும் வகையில், விவரிக்கப்படாமல் நடத்தப்படுகின்றன என்றார்.

கட்நத ஒக்டோபர் மாதம் ஈரானிய இராணுவ தளங்கள் மீது இஸ்ரேலிய(israel) தாக்குதல்கள் – தெஹ்ரானால் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது.ஈரானின் பெரும்பாலான வான் பாதுகாப்பு அமைப்புகள் தகர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது, இதில் ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட நான்கு S-300 வான் பாதுகாப்பு அமைப்புகள் அடங்கும்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...