24 661ce3ac49581
உலகம்செய்திகள்

அச்சுறுத்தல்களுக்கு ஈரான் பதிலளிக்கும்! ஈரானிய தூதுவர் பதிலடி

Share

அச்சுறுத்தல்களுக்கு ஈரான் பதிலளிக்கும்! ஈரானிய தூதுவர் பதிலடி

ஈரான் (Iran) போரை நாடவில்லை என்றாலும் ஆக்கிரமிப்பு மற்றும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் என ஐக்கிய நாடுகளுக்கான (UN) ஈரானிய தூதுவர் அமீர் சயீத் இரவானி (Amir Saeid Iravani) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் அவசர சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“பாதுகாப்புச் சபையானது சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதியை பேணுவதை தவறிவிட்டது.

இதனால் ஈரானிய அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலுக்கு பதிலளிப்பதை தவிர வேறு மாற்றுவழி இருக்கவில்லை.

தற்போது, பாதுகாப்புச் சபை, சர்வதேச பாதுகாப்புக்கும் அமைதிக்கும் உண்மையான அச்சுறுத்தல்களை கண்டறியும் பொறுப்பை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அதேவேளை, குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட ஐக்கிய நாடுகளுக்கான இஸ்ரேலிய (Israel) தூதுவர் கிலாட் எர்டன், பிராந்தியத்தையும் உலகையும் சீர்குலைக்கும் அதன் உண்மையான முகத்தை ஈரான் அம்பலப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...