16 27
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள ஈரானின் அறிவிப்பு

Share

மத்திய கிழக்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள ஈரானின் அறிவிப்பு

இஸ்ரேலுக்கு (Israel) எதிராக ஈரான் (Iran) விடுத்துள்ள அறிவிப்பானது, மத்திய கிழக்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதற்கமைய, இஸ்ரேலுக்கு பதிலடி வழங்க தங்களிடம் உள்ள அனைத்து கருவிகளையும் பயன்படுத்துவதற்கு திட்டமிட்டு வருவதாக ஈரான் அறிவித்துள்ளது.

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொலை செய்யப்பட்டதை பழி வாங்கும் விதமாக கடந்த ஒக்டோபர் 1ஆம் திகதி இஸ்ரேலை குறிவைத்து ஈரான் 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

 

குறித்த தாக்குதல்களில் அதிகப்படியான ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் தடுப்பு அம்சங்கள் தடுத்து நிறுத்தியதாகவும் ஈரானின் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுக்கும் எனவும் இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகள் பகிரங்கமாக சூளுரைத்திருந்தன.

 

இதன்படி, கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி தெஹ்ரான் மற்றும் மேற்கு ஈரானுக்கு அருகிலுள்ள ஏவுகணை தொழிற்சாலையை குறிவைத்து இஸ்ரேல் 3 அலைகளாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

 

இந்நிலையிலேயே, ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த தங்களிடம் உள்ள அனைத்து கருவிகளையும் பயன்படுத்துவதற்கு திட்டமிட்டு வருவதாக ஈரான் அறிவித்துள்ளது.

 

அத்துடன், இஸ்ரேலின் தாக்குதல் மட்டுப்படுத்தப்பட்ட சேதத்தையே ஏற்படுத்தி இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ள அதேவேளை, தற்போதைய நிலைமையின் தீவிரத்தை ஆராய்ந்து ஈரான் தமது பலத்தை நிலைநிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது.

 

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...