19 4
உலகம்செய்திகள்

நாட்டில் இருந்து வெளியேறிய சேக் ஹசீனா : சிறையிலிருந்து விடுவிக்கப்படவுள்ள முன்னாள் பிரதமர்

Share

நாட்டில் இருந்து வெளியேறிய சேக் ஹசீனா : சிறையிலிருந்து விடுவிக்கப்படவுள்ள முன்னாள் பிரதமர்

பங்களாதேஷின் பிரதமர் பதவியிலிருந்து சேக் ஹசீனா விலகி நாட்டை விட்டு வெளியேறிய சில மணி நேரங்களுக்குப் பின்னர், சிறையில் அடைக்கப்பட்டிருந்த, எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான காலிதா சியாவை (Khaleda Zia) விடுவிக்கும் உத்தரவை பங்களாதேஷின் ஜனாதிபதி முகமது சஹாபுதீன் (Mohammed Shahabuddin) விடுத்துள்ளார்.

காலிதா சியா பிரதமர் பதவியில் அமர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ள முன்னாள் பிரதமர் சேக் ஹசீனா, பெரும்பாலும் பிரித்தானியாவில் அடைக்கலம் பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதேவேளை பங்களாதேஷின் நெருக்கடி குறித்து நேற்று இந்தியாவில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்திற்கு இந்திய பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் சா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, பிரதமரின் முதன்மை செயலாளர் பிகே மிஸ்ரா, ரோவின் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...