24 666ca8e4010a6
உலகம்செய்திகள்

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் முக்கிய தகவல்

Share

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் முக்கிய தகவல்

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன்Trooping the Colour கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாம் மேற்கொண்டுவரும் சிகிச்சையால் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால், முழுமையாக குணமடையவில்லை என்றும் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் தமது புற்றுநோய் தொடர்பில் தகவல் பகிர்ந்துகொண்டு பிரித்தானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய இவர் முதல் முறையாக தற்போது இதயப்பூர்வமான தகவல் ஒன்றை நாட்டு மக்களிடம் பகிர்ந்துள்ளார்.

மேலும், வாழ்க்கையில் நல்ல நாட்களையும் மோசமான நாட்களையும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் தமது புற்றுநோய் சிகிச்சையானது பல மாதங்கள் நீடிக்கும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மன்னரின் பிறந்தநாள் விழாவில் கேட் மிடில்டன் பங்கேற்பார் என்பதை அரண்மனை வட்டாரங்களும் தற்போது உறுதி செய்துள்ளது.

இதனால் கேட் மிடில்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் குடும்ப உறுப்பினர்களுடன் காணப்படுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் புதிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு, கேட் மிடில்டன் அவரது ஆதரவாளர்களையும் அமைதிப்படுத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...