tamilnaadif scaled
உலகம்செய்திகள்

இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

Share

இந்தோனேஷியாவில் இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகலெங்கா தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் நேற்று (05.01.2023) குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் பல பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் தொடருந்து பெட்டிகள் உடைந்து அருகில் உள்ள வயல்வெளியில் விழுந்துள்ளதாகவும், அந்த பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்ட போது தொடருந்தில் 478 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் விபத்தில் பணியாளர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 28 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தொடருந்தில் 106 பயணிகளும், துரங்காவில் 54 பயணிகளும் மீட்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும் அரசு போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...