tamilnaadif scaled
உலகம்செய்திகள்

இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

Share

இந்தோனேஷியாவில் இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகலெங்கா தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் நேற்று (05.01.2023) குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் பல பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் தொடருந்து பெட்டிகள் உடைந்து அருகில் உள்ள வயல்வெளியில் விழுந்துள்ளதாகவும், அந்த பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்ட போது தொடருந்தில் 478 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் விபத்தில் பணியாளர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 28 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தொடருந்தில் 106 பயணிகளும், துரங்காவில் 54 பயணிகளும் மீட்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும் அரசு போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...