12 37
உலகம்செய்திகள்

97 நாடுகளுக்கு e-Visa on Arrival திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஆசிய நாடு

Share

97 நாடுகளுக்கு e-Visa on Arrival திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஆசிய நாடு

ஆசிய நாடான இந்தோனேசியா 97 நாடுகளுக்கு e-Visa on Arrival திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தோனேசியா தனது புதிய e-Visa on Arrival (e-VoA) திட்டத்தால் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு பயண அனுபவத்தை எளிதாக்கியுள்ளது.

இப்போது, இந்தியா உள்ளிட்ட 97 நாடுகளில் இருந்து பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் பாலி (Bali) மற்றும் பிற சுற்றுலா தலங்களைக் காண பயணிகள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்தோனேஷியாவின் e-VoA திட்டம் பயணிகளுக்கு முழுமையாக ஓன்லைனில் விசா விண்ணப்பத்தை முடிக்க வாய்ப்பளிக்கிறது.

இதற்கான கட்டணத்தையும் ஓன்லைனில் செலுத்தி, பயணத்திற்கு முன் விசாவை பெறலாம்.

இந்த நடவடிக்கையால் 2025-ல் 14 மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவேற்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

கட்டண விவரங்கள்
– இயல்பான e-VoA கட்டணம்: 500,000 IDR

– VFS Global சேவை கட்டணம்: 230,000 IDR

தேவையான ஆவணங்கள்
1. கடவுச்சீட்டு: வருகை திகதியிலிருந்து குறைந்தது ஆறு மாதங்கள் வரை செல்லுபடியாக இருக்க வேண்டும்.

2. புகைப்படம்: சமீபத்திய புகைப்படம்.

3. Return அல்லது Onward Ticket: பயணத்தை நிரூபிக்கும் ஆதாரம்.

விசா விண்ணப்பிக்கும் நடைமுறை
1. தகவல்களை அளிக்கவும்: VFS Global தளத்தில் தனிப்பட்ட தகவல்களை உள்ளிடவும்.

2. கட்டணத்தை செலுத்தவும்: ஓன்லைனில் பாதுகாப்பாக கட்டணத்தை செலுத்தவும்.

3. விசாவைப் பெறவும்: e-VoA-வை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும்.

இந்த திட்டம் 97 நாடுகளின் குடிமக்களுக்கு திறந்துள்ளது. இதில் இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் அடங்கும்.

இந்த e-VoA திட்டம், இந்தோனேசியாவிற்கு சுற்றுலா பயணிகளை எளிமையாக வரவேற்கும் வகையில் சிறந்த முயற்சியாக அமைகிறது.

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...