12 37
உலகம்செய்திகள்

97 நாடுகளுக்கு e-Visa on Arrival திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஆசிய நாடு

Share

97 நாடுகளுக்கு e-Visa on Arrival திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஆசிய நாடு

ஆசிய நாடான இந்தோனேசியா 97 நாடுகளுக்கு e-Visa on Arrival திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தோனேசியா தனது புதிய e-Visa on Arrival (e-VoA) திட்டத்தால் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு பயண அனுபவத்தை எளிதாக்கியுள்ளது.

இப்போது, இந்தியா உள்ளிட்ட 97 நாடுகளில் இருந்து பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் பாலி (Bali) மற்றும் பிற சுற்றுலா தலங்களைக் காண பயணிகள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்தோனேஷியாவின் e-VoA திட்டம் பயணிகளுக்கு முழுமையாக ஓன்லைனில் விசா விண்ணப்பத்தை முடிக்க வாய்ப்பளிக்கிறது.

இதற்கான கட்டணத்தையும் ஓன்லைனில் செலுத்தி, பயணத்திற்கு முன் விசாவை பெறலாம்.

இந்த நடவடிக்கையால் 2025-ல் 14 மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவேற்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

கட்டண விவரங்கள்
– இயல்பான e-VoA கட்டணம்: 500,000 IDR

– VFS Global சேவை கட்டணம்: 230,000 IDR

தேவையான ஆவணங்கள்
1. கடவுச்சீட்டு: வருகை திகதியிலிருந்து குறைந்தது ஆறு மாதங்கள் வரை செல்லுபடியாக இருக்க வேண்டும்.

2. புகைப்படம்: சமீபத்திய புகைப்படம்.

3. Return அல்லது Onward Ticket: பயணத்தை நிரூபிக்கும் ஆதாரம்.

விசா விண்ணப்பிக்கும் நடைமுறை
1. தகவல்களை அளிக்கவும்: VFS Global தளத்தில் தனிப்பட்ட தகவல்களை உள்ளிடவும்.

2. கட்டணத்தை செலுத்தவும்: ஓன்லைனில் பாதுகாப்பாக கட்டணத்தை செலுத்தவும்.

3. விசாவைப் பெறவும்: e-VoA-வை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும்.

இந்த திட்டம் 97 நாடுகளின் குடிமக்களுக்கு திறந்துள்ளது. இதில் இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் அடங்கும்.

இந்த e-VoA திட்டம், இந்தோனேசியாவிற்கு சுற்றுலா பயணிகளை எளிமையாக வரவேற்கும் வகையில் சிறந்த முயற்சியாக அமைகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...