24 66119749a2fac
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்மமான முறையில் மரணம்

Share

அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்மமான முறையில் மரணம்

அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில் உள்ள கிளவ்லேண்ட் நகரில் கல்வி பயின்று வந்த இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உமா சத்யசாய் கத்தே என்ற மாணவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மரணம் இந்த ஆண்டில் அமெரிக்காவில் இடம்பெற்ற 10-வது சம்பவம் என குறிப்பிடப்படுகிறது.

மேலும் இந்த தகவலை நிவ்யோர்க்கில் உள்ள இந்திய தூதரகம், உறுதி செய்துள்ளது.

உமா சத்யசாயை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்து கொள்வதாகவும், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர, அனைத்து உதவிகளும் குடும்பத்திற்கு செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

இதேவேளை இந்திய மாணவரின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...