24 6639a7a77c018
உலகம்செய்திகள்

வாக்களித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

Share

வாக்களித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார்.

இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், கடந்த மாதம் 19 -ம் திகதி மற்றும் 26-ம் திகதியில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

இந்நிலையில், இன்று உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா , மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் உட்பட்ட 93 தொகுதிகளில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். அப்போது, பிரதமர் மோடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, “மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகமான வாக்குகள் பதிவாக வேண்டும். மக்கள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும்.

மேலும், வெயில் அதிகமாக இருப்பதால் அதிகளவு தண்ணீரை குடிக்க வேண்டும். தேர்தலின் போது வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கும் தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுக்கள்” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...