24 6639a7a77c018
உலகம்செய்திகள்

வாக்களித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

Share

வாக்களித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார்.

இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், கடந்த மாதம் 19 -ம் திகதி மற்றும் 26-ம் திகதியில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

இந்நிலையில், இன்று உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா , மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் உட்பட்ட 93 தொகுதிகளில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். அப்போது, பிரதமர் மோடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, “மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகமான வாக்குகள் பதிவாக வேண்டும். மக்கள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும்.

மேலும், வெயில் அதிகமாக இருப்பதால் அதிகளவு தண்ணீரை குடிக்க வேண்டும். தேர்தலின் போது வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கும் தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுக்கள்” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...