10 26
உலகம்செய்திகள்

போர் பதற்றத்தின் மத்தியில் உக்ரைன் சென்ற மோடி அளித்த பரிசு

Share

போர் பதற்றத்தின் மத்தியில் உக்ரைன் சென்ற மோடி அளித்த பரிசு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உக்ரைனுக்கு, போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ சேவைகளை விரைவாக ஏற்படுத்துவதற்காக நான்கு மொபைல் மருத்துவமனை யூனிட்களை (Mobile Hospital Units) பரிசாக வழங்கியுள்ளார்.

குறித்த யூனிட்கள், “BHISHM” எனப்படும் (Bharat Health Initiative for Sahyog Hita & Maitri) கட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மொபைல் மருத்துவமனைகள், எந்த இடத்திலும் 10 நிமிடங்களில் செயல்படக்கூடிய மருத்துவ அமைப்புகளை உருவாக்க உதவுகின்றன.

இதில் 200-க்கும் மேற்பட்ட காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்குவதற்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவை முக்கிய மருத்துவ உதவிகளை வழங்குவதில் உக்ரைனுக்கு பெரும் ஆதரவாக இருக்கும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த யூனிட்களை வழங்குவதன் மூலம் இந்தியா, உலகளவில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் பணியில் உறுதியாக உள்ளது என்பதை பிரதமர் மோடி இந்த நடவடிக்கையால் மேலும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...