10 26
உலகம்செய்திகள்

போர் பதற்றத்தின் மத்தியில் உக்ரைன் சென்ற மோடி அளித்த பரிசு

Share

போர் பதற்றத்தின் மத்தியில் உக்ரைன் சென்ற மோடி அளித்த பரிசு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உக்ரைனுக்கு, போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ சேவைகளை விரைவாக ஏற்படுத்துவதற்காக நான்கு மொபைல் மருத்துவமனை யூனிட்களை (Mobile Hospital Units) பரிசாக வழங்கியுள்ளார்.

குறித்த யூனிட்கள், “BHISHM” எனப்படும் (Bharat Health Initiative for Sahyog Hita & Maitri) கட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மொபைல் மருத்துவமனைகள், எந்த இடத்திலும் 10 நிமிடங்களில் செயல்படக்கூடிய மருத்துவ அமைப்புகளை உருவாக்க உதவுகின்றன.

இதில் 200-க்கும் மேற்பட்ட காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்குவதற்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவை முக்கிய மருத்துவ உதவிகளை வழங்குவதில் உக்ரைனுக்கு பெரும் ஆதரவாக இருக்கும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த யூனிட்களை வழங்குவதன் மூலம் இந்தியா, உலகளவில் மனிதாபிமான உதவிகளை வழங்கும் பணியில் உறுதியாக உள்ளது என்பதை பிரதமர் மோடி இந்த நடவடிக்கையால் மேலும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...