உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் இந்திய தம்பதிக்கு 33 ஆண்டுகள் சிறை! 7,374 கோடி போதைப்பொருள் கடத்திய வழக்கில் தீர்ப்பு

Share

அவுஸ்திரேலியாவுக்கு 700 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான போதைப்பொருட்களை கடத்திய இந்திய வம்சாவளி தம்பதிக்கு, பிரித்தானியாவில் 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த தம்பதி 59 வயதான ஆர்த்தி தீர் (Arti Dhir), 35 வயதான கவல்ஜித்சிங்ஹ் ராய்ஜடா (Kavaljitsinh Raijada).

இந்திய வம்சாவளியான இவர்கள் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். 2017ஆம் ஆண்டில் இந்த தம்பதியின் தத்து மகன் கோபால் செஜானி (11) கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். அவனை காப்பாற்ற சென்ற ஹர்சுக் கர்தனி என்ற உறவினரும் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட தீர், ரைஜாடா தம்பதி ஆயுள் தண்டனை என்பது அவர்களின் மனித உரிமைகளை மீறும் என்று பிரித்தானிய நீதிமன்றங்களை நம்ப வைத்து, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பினர்.

பின்னர் 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடையில், 700 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள கோகோயின் ஏற்றுமதி செய்ததற்கான வழக்கில் இந்த தம்பதி சிக்கியது.

‘Breaking Bad’ தொடர் பாணியில் இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு கடத்திய போதைப்பொருட்களின் மதிப்பு 888 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் 7,374 கோடி) ஆகும்.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய அதிகாரிகள் போதைப்பொருளை இடைமறித்து, பிரித்தானியாவின் தேசிய குற்றவியல் முகாமைக்கு (NCA) எச்சரித்தபோது தம்பதியரின் சட்டவிரோத நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

அடுத்தடுத்த NCA விசாரணையில், இந்த தம்பதி அவுஸ்திரேலிய சந்தையில் 57 பவுண்டுகள் மில்லியன் மதிப்புள்ள 514 கிலோகிராம் கோகோயின் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன் Viefly Freight Services என்ற முன்னணி நிறுவனத்தைப் பயன்படுத்தி, உலகளவில் வணிக ரீதியாக மருந்துகளை அனுப்பும் அதிநவீன நடவடிக்கையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து ஆர்த்தி தீர், கவல்ஜித் தம்பதிக்கு பிரித்தானியாவில் தலா 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....