1 21 scaled
உலகம்செய்திகள்

லொட்டறியில் பெருந்தொகை பரிசை அள்ளி கண்கலங்கிய இந்தியர்

Share

லொட்டறியில் பெருந்தொகை பரிசை அள்ளி கண்கலங்கிய இந்தியர்

இந்தியாவின் மராட்டிய மாகாணத்தை சேர்ந்த நபர் பிழைப்புக்காக ஐக்கிய அமீரகம் சென்றிருந்த நிலையில், நீண்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு நெகிழ்ச்சி திருப்பமாக லொட்டறியில் ரூ.55 லட்சம் வென்றுள்ளார்.

மராட்டிய மாகாணம் மும்பை நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் சேவியர் பெர்னாண்டஸ். கடந்த 1996ல் பிழைப்புக்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சென்றுள்ளார். துபாய் மாகாணத்தில் புதிய வாழ்க்கையை தேடிய அவருக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு சேவை நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ளது.

தற்போது, நீண்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு, நெகிழ்ச்சி திருப்பமாக MEGA7 லொட்டறியில் இரண்டாவது பரிசாக Dh250,000 அள்ளியுள்ளார். இதற்கு முன்னர் பலமுறை சிறிய தொகைகளை லொட்டறியில் வென்றிருந்தாலும், பெருந்தொகையை பரிசாக வெல்வது இதுவே முதல்முறை என தெரிவித்துள்ளார்.

லொட்டறி நிர்வாகத்திடம் இருந்து அழைப்பு வந்த அடுத்த சில நிமிடங்களில் தமது அன்பு மனைவிக்கு தெரியப்படுத்தியதாகவும், அந்த தொகையை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார் எனவும் அலெக்ஸ் சேவியர் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

MEGA7 லொட்டறியில் முதல் பரிசான ரூ.226 கோடியை இதுவரை தனியாகவோ, குழுவாகவோ மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாட்டவர்களில் எவரும் வென்றதில்லை என்றே கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...