2 14
உலகம்செய்திகள்

படிக்கவைப்பதாக அழைத்துவந்து கொடுமைப்படுத்திய இந்திய வம்சாவளி தம்பதிக்கு சிறை

Share

படிக்கவைப்பதாக அழைத்துவந்து கொடுமைப்படுத்திய இந்திய வம்சாவளி தம்பதிக்கு சிறை

இந்தியாவிருந்து உறவினர் ஒருவரை அமெரிக்காவில் படிக்கவைப்பதாக அழைத்துவந்து கொடுமைப்படுத்திய இந்திய வம்சாவளி தம்பதிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளி தம்பதியினர், தங்கள் உறவினர்களில் ஒருவரை பாடசாலையில் படிக்கவைப்பதாக கூறி அமெரிக்காவிற்கு அழைத்து வந்து பெட்ரோல் பம்ப் மற்றும் ஜெனரல் ஸ்டோரில் கட்டாயப்படுத்தி 3 ஆண்டுகள் வேலை செய்யவைத்துள்ளனர்.

அமெரிக்க நீதிமன்றம் இந்த தம்பதிக்கு 11.25 ஆண்டுகள் (135 மாதங்கள்) சிறைத்தண்டனை விதித்துள்ளது.

31 வயதான இந்திய அமெரிக்க குடிமகன் ஹர்மன்பிரீத் சிங் (Harmanpreet Singh) மற்றும் அவரது 43 வயது மனைவி குல்பீர் கவுர் (Kulbir Kaur) ஆகியோர் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.87 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹர்மன்ப்ரீத்தும் குல்பீரும் இப்போது விவாகரத்து பெற்றனர்.

செய்தி நிறுவனமான PTI-யின் அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தவறான வாக்குறுதிகளின் பேரில் தங்கள் உறவினரை அமெரிக்காவிற்கு அழைத்து வந்துள்ளனர்.

அதன் பிறகு, அவர்கள் அந்த நபரின் கடவுச்சீட்டு மற்றும் குடியேற்ற ஆவணங்களை பறித்து வைத்துக்கொண்டுள்ளனர்.

மேலும், அவரை சித்திரவதை செய்து, தங்களது கடையில் மணிக்கணக்கில் வேலை செய்ய வைத்துள்ளனர். அந்த வேலைக்கு அவருக்கு மிகக் குறைந்த பணமே வழங்கப்பட்டுள்ளது.

தம்பதிகள் பாதிக்கப்பட்ட அந்த அண்ணாத்துரை 12-17 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்ய வைத்துள்ளனர்.

மேலும் அவர் வேலையை விட்டு வெளியேற முயற்சித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் மார்ச் 2018 முதல் மே 2021 வரை வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

அவர் சுத்தம் செய்தல், சமைத்தல், கடையில் பொருட்களை சேமித்தல், பணப் பதிவேட்டைக் கையாளுதல் போன்ற வேலைகளைச் செய்ய வைக்கப்பட்டுள்ளார்.

12-17 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்தாலும், பதிலுக்கு, அவருக்கு சரியான உணவு கூட வழங்கப்படவில்லை.

மேலும், அவர் மருத்துவம் மற்றும் கல்வி வசதிகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.

கடையில் பொருத்தப்பட்டிருந்த கமெரா மூலம் அவரைத் தம்பதியினர் கண்காணித்துவந்துள்ளனர். அவர் இந்தியா செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்டவரின் விசா காலாவதியான பிறகு, குல்பீர் கவுரை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அவர் தப்பி ஓட முயன்றால், அவரது குடும்பத்தினரின் பணம் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் பறித்துவிடுவோம் என்று குல்பீர் மிரட்டியுள்ளார்.

அவர்கள் அவரது தலைமுடியை இழுத்து உதைத்தனர். இது தவிர, பாதிக்கப்பட்டவர் விடுப்பு கேட்டபோது, ​​துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...