2 scaled
உலகம்செய்திகள்

பகை வளர்த்த நாடு… ஆனாலும் உதவித்தொகையில் பல கோடிகளை அதிகரித்த இந்தியா

Share

பகை வளர்த்த நாடு… ஆனாலும் உதவித்தொகையில் பல கோடிகளை அதிகரித்த இந்தியா

இந்த ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மாலத்தீவுக்கான வளர்ச்சி உதவித் தொகையில் ரூ 600 கோடியாக 50 சதவீதம் உயர்த்தி இந்தியா அறிவித்துள்ளது.

இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று இந்த நிதியுயர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீப நாட்களில் மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருந்த போதும், கடந்த ஆண்டு மட்டும் மாலத்தீவுக்கு என இந்தியா ரூ 400 கோடி ஒதுக்கியிருந்தது. ஆனால் கூடுதலாக ரூ 370 கோடி செலவிட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது ரூ 600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு செலவிட்டுள்ள தொகையை விடவும் 22 சதவிகிதம் குறைவு என்றே கூறப்படுகிறது.

நட்பு நாடுகளின் முன்னுரிமைகளைப் பொறுத்து, இந்தியாவின் நிதியுதவி ஒத்துழைப்பு வர்த்தகம் முதல் கலாச்சாரம், மின்சாரம் முதல் பொறியியல், சுகாதாரம் முதல் குடியிருப்பு, தகவல் தொழில்நுட்பம் முதல் உள்கட்டமைப்பு, விளையாட்டு முதல் அறிவியல் வரை பங்களிக்க முன்வரும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் புதிதாக தெரிவான ஜனாதிபதி முகமது முய்சு சீனா சார்புடையவர் என்பதால், இரு நாடுகளின் நீண்ட கால உறவில் சிறு விரிசல் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு தலைவர்கள் சிலர் இழிவான கருத்துகளை வெளியிட்டதைத் தொடர்ந்து சமீபத்திய நகர்வுகள் அனைத்தும் இந்தியர்களிடமிருந்து பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மட்டுமின்றி, ஜனாதிபதியாக தெரிவான பின்னர் முய்ஸுவின் சீனப் பயணம் இந்தியாவுடனான மாலத்தீவின் உறவுகளை அவர் எவ்வாறு நடத்த திட்டமிட்டுள்ளார் என்பதற்கான ஒரு சமிக்ஞையாகவும் பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...