20 7
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயம்: அதிகரிக்கப்படும் பாதுகாப்பு

Share

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயம்: அதிகரிக்கப்படும் பாதுகாப்பு

பிரித்தானியாவில் (UK) புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக தீவிர வலதுசாரி அமைப்பினர் கலவரத்தில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்துவதற்காக முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் பல்வேறு நகரங்களில் புலம்பெயர்தலுக்கு எதிா்ப்பு தெரிவித்து வலதுசாரிகள் கடந்த வாரம் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்தது.

அதனை தொடர்ந்து, வன்முறைகளில் ஈடுபட்ட 400 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, கலவரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) இரண்டாவது முறையாகவும் அமைச்சர்கள் உட்பட மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்து கோப்ரா கூட்டத்தை நடத்தினார்.

இந்த நிலையில், புதிய ஆா்ப்பாட்டக் கூட்டங்களுக்கு வலதுசாரி அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளதால் மீண்டும் கலவரம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான காவல்துறையினர் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், புலம்பெயர்தலுக்கு ஆதரவான வழக்கறிஞர்கள் மற்றும் அவா்கள குடியிருப்புகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...