20 7
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயம்: அதிகரிக்கப்படும் பாதுகாப்பு

Share

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயம்: அதிகரிக்கப்படும் பாதுகாப்பு

பிரித்தானியாவில் (UK) புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக தீவிர வலதுசாரி அமைப்பினர் கலவரத்தில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்துவதற்காக முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் பல்வேறு நகரங்களில் புலம்பெயர்தலுக்கு எதிா்ப்பு தெரிவித்து வலதுசாரிகள் கடந்த வாரம் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்தது.

அதனை தொடர்ந்து, வன்முறைகளில் ஈடுபட்ட 400 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, கலவரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) இரண்டாவது முறையாகவும் அமைச்சர்கள் உட்பட மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்து கோப்ரா கூட்டத்தை நடத்தினார்.

இந்த நிலையில், புதிய ஆா்ப்பாட்டக் கூட்டங்களுக்கு வலதுசாரி அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளதால் மீண்டும் கலவரம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான காவல்துறையினர் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், புலம்பெயர்தலுக்கு ஆதரவான வழக்கறிஞர்கள் மற்றும் அவா்கள குடியிருப்புகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 180
செய்திகள்உலகம்

உலக நிதிச் சந்தைகளுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு போரினால் அதிகரிக்கும் அபாயங்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய நிதி நிலைத்தன்மைக்கு (Global Financial Stability) முன்னெப்போதும்...

world 179
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லவாயவில் பயங்கரம்: காதலனால் இளம் பெண் வெட்டிக்கொலை!

வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான...

world 178
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பாதுகாக்கப்பட்ட 238 ஈரானியர்கள் தாயகம் திரும்பினர்: விசேட விமானம் மூலம் ஈரானுக்குப் பயணம்!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களில் இருந்து மீட்கப்பட்டு, இலங்கையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மொத்தம்...

world 177
செய்திகள்உலகம்

போப்பின் விமர்சனங்களுக்கு ஜே.டி. வேன்ஸ் பதிலடி: இறையியல் விவகாரங்களில் போப் கவனமாக இருக்க வேண்டும்

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் போர் நடவடிக்கைகள் குறித்து போப் லியோ XIV (Pope Leo...