rtjy 160 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

அமெரிக்க கிரீன் கார்ட் விண்ணப்பதாரர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Share

அமெரிக்க கிரீன் கார்ட் விண்ணப்பதாரர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

அமெரிக்காவில் கிரீன் கார்ட் விண்ணப்பதாரர்களுக்கு வேலைவாய்ப்பு கால அவகாசம் 5 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அறிவித்துள்ளது.

முன்னதாக அதிகபட்ச காலமாக இரண்டு ஆண்டுகளுக்கு மாத்திரமே கிரீன் கார்ட் விண்ணப்பிக்கலாம். இரண்டு ஆண்டு காலம் முடிந்த பின்னர் மீண்டும் நீடிக்க கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

ஆனால் தற்போது இந்த வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களுக்கான(Employment Authorization Documents) செல்லுபடி காலத்தை 5 ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அறிவித்துள்ளது.

கடந்த (27.09.2023) முதல் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களுக்கு விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு இது பொருந்தும் எனவும் இதனால் 2 ஆண்டுகளில் இதனை நீடிக்க வேண்டிய தேவையிருக்காது என தெரிவித்துள்ளது.

கிரீன் கார்ட் விண்ணப்பங்கள் இலட்சக்கணக்கில் நிலுவையில் உள்ள நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு இந்த கால நீடிப்பு உதவியாகவே அமைவதாகவும் இது அவர்களுக்கு அமெரிக்காவில் தொடர்ந்து பணி புரியும் வாய்ப்பினை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஹெச்-1பி, ஹெச்-1சி, ஹெச்-2ஏ, ஹெச் -2பி, ஹெச்-3 விசா வைத்திருப்பவர்களின் கணவன் மற்றும் மனைவிக்கும் விருப்ப நடைமுறை பயிற்சி (OPT) திட்டத்தின் கீழ் உள்ள சர்வதேச மாணவர்களுக்கும் இந்த நீடிப்பு காலம் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....